Skip to main content

“நாயகன் படத்தில் அழ சொன்னபோது விழுந்து விழுந்து சிரித்தேன்”- சரண்யா பொன்வண்ணன் எக்ஸ்க்ளூசிவ்

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் ராம் படம் குறித்தும் நாயகன் படம் குறித்தும் பேசிய பகுதி....
 

nayagan

 

 

“ராம் படம் நடிக்கும்போது நானும் ஜீவா தவிர வேறு ஆர்ட்டிஸ்ட்டே இல்லை. அந்த காலக்கட்டத்தில் ஜீவாவும் நிறைய படங்களில் நடிக்காமல் குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்துக்கொண்டு ஃப்ரீயாக இருந்த கட்டம், நானும் படம் வாய்ப்புக் கிடைக்காமல் ஈ ஓட்டிக்கொண்டு இருந்த நேரம். அமீர் எங்களைக் கொண்டுபோய் ஹவுஸ் அரஸ்ட் மாதிரி கொடைக்கானலில் வைத்திருந்தார். இருபது நாட்கள்கூட அங்கேயே நாங்கள் இருந்திருக்கிறோம். கட்டு கட்டாக சின்னதாக  ‘ஆராரிராரோ’ பாடலை பத்து நாட்கள் எடுத்தார். நாங்கள் எதுக்கு வந்தோம் என்றே மறந்து போய்விடுவோம், அமீர் நமாஸ் பண்ண கிளம்பிவிடுவார். நாங்கள் எங்கையாவது எதையாவது வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருப்போம். அது ஷூட்டிங் மாதிரி இல்லாமல் மிகவும் ஜாலியாக இருந்தது. கூலா டென்ஷனே இல்லாமல் இருப்போம், அமீர் வருவார் ஷாட் எடுப்பார் பிறகு அவர் போய்விடுவார். நாங்கள் எங்காவது போய்விடுவோம். அப்போது நானும் ஜீவாவும் கதை பேசியிருக்கிறோம், அந்த மாதிரி என் வாழ்க்கையில் வேறு யாரிடமும் நான் கதை பேசியதில்லை. மலை மேல் அமர்ந்துக் கொண்டு ஜீவா, தான் பிறந்ததில் இருந்து அப்போதுவரை என்ன பண்ணினார் என்பதை என்னிடம் சொல்லிவிட்டார்.  நான் பிறந்ததில் இருந்து அப்போதுவரை என்ன பண்ணினேன் என்பதை ஜீவாவிடம் சொல்லிவிட்டேன். பல வருட நண்பர்கள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதுபோல நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். நாங்கள் பொது இடத்தில் உட்கார்ந்துக்கொண்டு கதை பேசிக்கொண்டிருப்பதை அங்கு வரும் டூரிஸ்டுகளுக்கு கூட கவனிக்க மாட்டார்கள். அது ஒரு கோல்டன் பீரியட் என்றுதான் சொல்வேன். அதேபோல அமீர் சாருடன் எனக்கு மிகவும் நல்ல ஒரு எக்ஸ்பிரியன்ஸ். ஒரு சின்ன காட்சியாக இருந்தாலும் ரொம்பவும் மெனக்கெடல் எடுத்து இயக்குவார்.

அதுபோன்ற அனுபவம் எனக்கு நாயகன் படத்தில் மணிரத்னத்துடன் ஏற்பட்டது. கோவிலில் எனக்கு கமல் சார் தாலி கட்டும் காட்சியில் தாலி கட்டியவுடன் நான் அழுக வேண்டும் என்று மணி சொன்னார். அவர் விளையாட்டுக்குதான் சொல்கிறார் என்று முதலில் விழுந்து விழுந்து சிரித்தேன். ஆனால், நீ அழுதால்தான் நாங்கள் அடுத்த காட்சிக்கு போவோம் என்று சொல்லிவிட்டு நான் அழுவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் தான் நான் அழுதேன். அப்போது அது முதன் முறை என்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், ராம் படத்தில் நீங்க அழுவுங்க மேம் என்று அமீர் சொன்னவுடன் சிறிது நேரத்தில் செய்துவிட்டேன். அந்த நேரத்தை நாயகன் படத்துடன் ரிலேட் செய்துக்கொள்ள முடிந்தது. எனக்கும் அப்படியொரு மாற்றம் பிடித்திருந்தது” என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.