Skip to main content

“மதங்களைப் பார்க்க மாட்டேன் என்று சினிமாவில் மட்டும் சொல்பவனல்ல”- டி.ராஜேந்தர்

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

டி.ராஜேந்தர் இளைய மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசனுக்கும் நபீலா என்பவருக்கும் கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
 

tr


நேற்று ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், “என்னுடைய இளைய மகன் திருமணத்தைப் பொறுத்தவரையில், நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் கிடையாது. ‘மதங்களைப் பார்க்க மாட்டேன்’ என்று சினிமாவில் மட்டும் சொல்றவன் டி.ராஜேந்தர் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, என் மகன் மனதுக்குப் பிடித்திருக்கிறதா கல்யாணம் செய்துகொள். உனக்கு ஓகே என்றால், எனக்கும் சம்மதம். ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடியவன் நான்.
 

devarattam


தாய் தந்தைகள், தங்கள் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர், ஆளாக்குகின்றனர். ஆனால், கல்யாணம் என்று வரும்போது, அப்பா அம்மா விருப்பப்படிதான் பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இது என்னுடைய கருத்து. பிள்ளைகள் ஆசைப்பட்டால் துணி வாங்கித் தருகிறோம், பொம்மை வாங்கித் தருகிறோம், பைக் வாங்கித் தருகிறோம். அதேபோல், கல்யாணத்திலும் பிள்ளைகளின் உணர்வை மதிக்கக்கூடிய தாய்- தந்தையாக எல்லோரும் இருக்க வேண்டும். ஆனால், அப்படி எல்லோருமே இருக்க முடியாது. ஒவ்வொரு தாய் தந்தைக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும், நல்ல தாய் தந்தையாக இருப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விமர்சனம்; விமோசனம்’ - தனது ஸ்டைலில் பதிலளித்த டி. ராஜேந்தர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
t.rajendar about vijay political entry

விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “அரசியல் என்பது பொது மொழி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் வரட்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரை பற்றிய கேள்விக்கு இப்போது நான் பண்ணவில்லை விமர்சனம். கடவுள்கிட்ட கேட்கிறதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்” என்றார்.  

Next Story

திடீரென மயக்கமடைந்த டி.ராஜேந்தர் !

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
TRajender fainted suddenly in tuticorin

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான தென்மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு உட்பட பலரும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகின்றனர். 

அந்த வகையில் திரை பிரபலம் டி.ராஜேந்தர் தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழு பார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து இருக்கையில் உட்காரவைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து சரிப்படுத்தினர். இருப்பினும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.