Skip to main content

”பழைய 'விக்ரம்’ படத்தின் தொடர்ச்சி இருக்காது; அதே சமயம்...” - ’விக்ரம்’ படத்தின் ரகசியம் உடைத்த ரத்னகுமார்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

 Rathna Kumar

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் கதை, வசனத்தில் பங்களித்துள்ள இயக்குநர் ரத்னகுமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விக்ரம் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

வித்தியாசமாக பண்ணலாம் என்று நினைத்து நிறைய புதுப்புது விஷயங்களை முயற்சி செய்திருக்கிறோம். அடுத்த பல படங்களுக்கு தொடக்கமாக இருக்கும் வகையில் லோகேஷ் செய்த சில விஷயங்கள் படத்தில் உள்ளன. படம் பற்றி இப்போது உள்ள கணிப்புகளைத் தாண்டி ரசிக்க வைக்கும்படியான விஷயங்கள் படத்தில் உள்ளன. முந்தைய விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. அதேநேரத்தில், இந்தப் படம் இதோடு முடியாமல் எப்படி வேண்டுமானாலும் அடுத்து தொடர்வதற்கான விஷயங்கள் படத்தில் உள்ளன. 

 

கதை எழுதும்போது இந்த நடிகர் இருக்கிறார், அந்த நடிகர் இருக்கிறார் என்றெல்லாம் நம்மை கட்டுப்படுத்தி எழுதமுடியாது. கதை யாரை கேட்கிறதோ, அந்த நடிகரைத்தான் நடிக்கவைக்க வேண்டும். அப்படித்தான் இந்தப் படம் நடந்தது. இதுவரை பார்த்த படங்களில் இருந்ததுபோல விஜய்சேதுபதியின் பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி இருக்காது. நான் படம் பார்த்தபோது எந்த இடத்திலும் விஜய்சேதுபதி தெரியவேயில்லை. இனி அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் அந்த மாற்றத்தை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

 

ஒவ்வொருமுறை ஆக்‌ஷன் சொன்னதும் பகத் ஃபாசில் சாரை பார்த்தால் நமக்கு பக்குனு இருக்கும். ரொம்பவும் கேஷுவலா பேசிக்கிட்டு இருப்பார். ஆக்‌ஷன் சொன்னதும் அப்படியே மாறிவிடுவார். படத்தில் சூர்யா சார் நடிக்க இருக்கும் விஷயத்தை ஷூட் இறுதிகட்டத்தை நெருங்கிய சமயத்தில்தான் எனக்கே லோகேஷ் சொன்னார். அது ரொம்பவும் சர்ப்ரைஸாக இருந்தது. சூர்யா சார் காட்சிகள் எல்லாமே பயங்கரமாக வந்துள்ளது. 

 

கமல் சாரை எப்போது பார்த்தாலும் அதே வியப்பு உள்ளது. எல்லோருமே ஒரு கட்டத்தில் களைப்படைந்துவிடுவார்கள். ஆனால், கமல் சார் அப்படியில்லை. நாமே போதும் என்று நினைத்தால்கூட அவர் விடமாட்டார்.எவ்வளவு விமர்சனம் வந்தாலும் கமல் சார் துவண்டுவிடமாட்டார். எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்த விஷயமும் அதுதான். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல ஹீரோவுடன் ஜோடி; ஹாரர் ஜானரில் நயன்தாரா

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

nayanthara next to pair with Raghava Lawrence under rathna kumar direction

 

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் அடுத்ததாக ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனிடையே லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதையும் எழுதி வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் பணியாற்றி வருகிறார். 

 

ad

 

இந்த நிலையில் ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸை வைத்து ஒரு புது படம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், ஹாரர் ஜானரில் இப்படம் உருவாகுவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நயன்தாரா, ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா 2' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

Next Story

விக்ரம் பட பிரபலம் மீது இளம்பெண் கொடுத்த புகார் - காவல் நிலையத்தில் விசாரணை

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

vishnu edavan case Transfer to other police station

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களிலும் இணை இயக்குநராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன். மேலும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தில் 'பொளக்கட்டும் பற பற', விக்ரம் படத்தில் 'போர் கண்ட சிங்கம்', 'நாயகன் மீண்டும்' உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

 

இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்து கர்ப்பமானதை தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறி சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் விஷ்ணு இடவனும் காதலித்து வந்துள்ளதாகவும் அப்போது அந்த பெண் கர்ப்பமான நிலையில் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால், திருமணத்திற்கு விஷ்ணு இடவன் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் விஷ்ணு இடவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இருதரப்பிலும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.