Skip to main content

ஏ.வி.எம் சரவணனை சந்தித்த ரஜினிகாந்த்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

rajinikanth meets avm saravanan

 

தென்னிந்திய மொழிகளில் அனுபவம் வாய்ந்த புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஏ.வி.எம் ப்ரொடக்‌ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தியது. 

 

1945 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது ஏ.வி.எம் சரவணன் கவனித்து வருகிறார். இவர் தயாரித்த ரஜினியின் எஜமான், சிவாஜி, சூர்யாவின் பேரழகன், அயன், விக்ரமின் ஜெமினி உள்பட பல படங்கள் கிட்டத்தட்ட 100 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

 

ஏ.வி.எம் சரவணனுக்கு கையில் அடிபட்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை கடந்த 29.04.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று (05.05.2023) ஏ.வி.எம் சரவணன் வீட்டிற்குச் சென்று அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதனை ஏ.வி.எம் குழுமத்தைச் சேர்ந்த அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்