Skip to main content

பாதுகாப்பை வாபஸ் வாங்கிய அரசு; அடுத்த நாள் பாடகர் கொடூர கொலை

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

punjabi singer sidhu moose wala passed away

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்நதவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது பாடல்கள் மூலம் துப்பாக்கிக் கலாச்சாரம், கேங்ஸ்டர் கலாச்சாரம் உள்ளிட்டவற்றைப் புகழ்ந்து பாடி அதனை ஊக்குவிப்பதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மான்ச தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

 

இதனைத்தொடர்ந்து பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றது. இதையடுத்து, பகவந்த் மான் தலைமையிலான அரசு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற்று வருகிறது. அந்த வகையில், அண்மையில் 420 முக்கிய பிரமுகர்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதில்  பஞ்சாபி பாப் பாடகர்  சித்து மூஸ் வாலாவும் ஒருவர்.

 

இந்நிலையில் பாடகர் சித்து மூஸ் வாலா மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். அதில் அவருடன் காரில் சேர்ந்து பயணித்த இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாடகர் சித்து மூஸ் வாலா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாடகர்  சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட அடுத்த நாளே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்