Skip to main content

மீண்டும் ரஜினி படத்தில் நீலாம்பரி ; வெளியான புது தகவல்

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Nilambari in Rajini again; New information released

 

விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ரஜினியின் 169' படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் திலீப் குமார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. 

 

இந்நிலையில் 'ரஜினியின் 169' படத்தை பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியான 'படையப்பா' படத்தில் ரஜினிக்கு வில்லியாக இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்திரம் மக்கள் மனதில் இன்றும் இடம் பிடித்து வருகிறது. 'ரஜினியின் 169' படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Next Story

‘தனுஷ் 50’ - அப்டேட் கொடுத்த படக்குழு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
dhanush 50 first look update

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனுஷின் 50வது பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதனை ஒரு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதில் தனுஷ் மொட்டை கெட்டப்புடன் ரத்தம் ஒழுகிய நிலையில் பின் திரும்பி நிற்கிறார். இதேபோல் தான் இப்பட அறிவிப்பு வெளியான போஸ்டரிலும் இடம் பெற்றிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டைட்டிலோடு தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது.