Skip to main content

“தலைவா வேற லெவல்..!” மாஸ்டர் படத்தைக் காண கடல்தாண்டி வந்த ரசிகை...!

Published on 03/02/2021 | Edited on 05/02/2021

 

malaysia girl who came to chennai for master film

 

கரோனா பெருந்தொற்றால் கடந்த வருடம் முழுவதும் முழு அடைப்பு விதிக்கப்பட்டு சர்வதேச எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாய் மாறியது. 
 

தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவருவதால், இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. அதேநேரம் அண்டை நாடுகளில் இன்னும் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்படாததால் தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை திறக்கப்படாமல் உள்ளது. 
 

சில வாரங்களுக்குமுன் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. கரோனா பரவல் காரணமாக மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தீவிர விஜய் ரசிகையான மலேசியாவாழ் தமிழ்ப் பெண் ஒருவர், எப்படியாவது விஜய்யின் மாஸ்டர் படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 


எப்படியும் படம் பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்த விஜய் ரசிகை ஆஷ்லினா, மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். மேலும் சென்னை சத்யம் வளாகத்தில் உள்ள ஒரு தியேட்டரின் இருக்கைகளை முழுதாக புக் செய்து தனது நண்பர்கள், உறவினர்களுடன் மாஸ்டர் படம் பார்த்துள்ளார். 


இதுபற்றி ஆஷ்லினா கூறுகையில், “சிறு வயது முதலே நான் விஜய்யின் தீவிர ரசிகர். எப்போதும் விஜய் படங்கள் வெளியானதும் முதல் நாளே பார்த்துவிடுவேன். மாஸ்டர் படத்தையும் அப்படி முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், மலேசியாவில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் மாஸ்டர் படத்தைப் பார்க்க முடியாமல் போனது. அதனால் விமானம் மூலம் சென்னை வந்து சத்யம் தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்து ரசித்தேன்” என்று தெரிவித்தார். 
 


மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “15 மாதங்கள் கழித்து தளபதியை வெள்ளித் திரையில் பார்க்கிறேன். தலைவா வேற லெவல்..” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.