Skip to main content

மாநாட்டில் உறங்கிய சிம்பு! வைரலாகும் புகைப்படம்!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

vafaf

 

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

 

vdavad


அதில், ஒரு புகைப்படத்தில் சிம்பு மண் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நின்று பேசிக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு, கூடவே "நடிகர்களின் வாழ்க்கை. எளிய மனிதர்" என குறிப்பிட்டுள்ளார். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அன்னைக்கு முடியல அதுனாலதான் இன்னைக்கு வந்தேன்" - சிம்புவின் சர்ப்ரைஸ் விசிட் !

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

silambarasan talk about maanaadu 100days

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில் சென்னையில் 'மாநாடு' படம் ஓடிக்கொண்டிருக்கும் ரோகினி திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அங்கு ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, "'மாநாடு' படம் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னுடைய வெற்றி அல்ல. தமிழ் சினிமாவிற்கும், 'மாநாடு' படக்குழுவினருக்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர்,"நீங்கள் ரசிகர்களை சந்திப்பதாக இருந்த நிலையில் அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது ஏன் எனக் கேட்க, அதனால் தான் இன்னைக்கு வந்தேன் என சிம்பு பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர்.

 

 

Next Story

'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபலங்கள்

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

naga chaitanya and pooja hegde play maanaadu film telugu remake

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை பிற மொழியில் ரீமேக் செய்யும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் 'மாநாடு' படத்தின் தெலுங்கு உரிமையை நடிகர் ராணா டகுபதியின் தந்தை டகுபதி சுரேஷ் பாபு கைப்பற்றியுள்ளதாக அறிவித்திருந்தார் 

 

இந்நிலையில் 'மாநாடு' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிம்பு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நாக சைதன்யாவும், கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய வெங்கட் பிரபுவே தெலுங்கிலும் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.