Skip to main content

"நடிகைக்கு பெரிதளவில் இடம் கிடைப்பது கஷ்டமான விஷயம்" - கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

keerthy suresh speech at maamannan success meet

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர். 

 

இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். 

 

இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ், "இதுபோன்ற பெரிய படத்தில் நடிகைக்கான கதாபாத்திரம் பெரிதளவில் கிடைப்பது ஒரு கஷ்டமான விஷயம். ஆனால் அந்த மாதரி ஒரு பெரிய இடத்தை இப்படத்தில் ஏற்படுத்திக் கொடுத்த மாரி செல்வராஜுக்கு நன்றி. இதுபோன்று நிறைய நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கணும். இனி வரும் இயக்குநர்களுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்