Skip to main content

"90 சதவிகித பெண்கள் வாழும் வாழ்க்கையை இந்தப் படத்தில் பிரதிபலித்துள்ளேன்..." - நடிகை ஜோதிகா பேச்சு!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Jyothika

 

இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள உடன் பிறப்பே திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர் ஒரே இரவில் 30 லட்சம் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது.

 

காணொளி வாயிலாக நேற்று நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா பேசுகையில், "எனது குருநாதர்கள் பிரியதர்ஷன் சார் மற்றும் வசந்த் சார் இருவருக்கும் நன்றி. எனக்கு தெரிந்த அனைத்துமே இருவரிடமும் கற்றுக்கொண்டதுதான். என்னுடைய கணவர் சூர்யாவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அவர்தான் என்னுடைய பெரிய பலம். எனது திரைப்பயணம் மிகவும் எளிமையானது. ஆரம்பத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

 

என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில்தான் நிறைய கற்றுக்கொண்டேன். எனது திரைப் பயணத்தில் இதுதான் முக்கியமானது. புது இயக்குநர்கள், புது கதைகள் என கடந்த 8 ஆண்டுகள் மிகவும் அழகானது. பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். 'உடன்பிறப்பே' என்னுடைய 50ஆவது படம். இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நடித்த படங்கள் அனைத்திலுமே நிறைய பேசியிருப்பேன். ஆனால், பெண்களின் உண்மையான வலிமையை இந்தப் படத்தில்தான் பிரதிபலித்துள்ளேன். பெண்களின் மிகப்பெரிய பலம் என்பது அமைதிதான். 90% பெண்கள் இந்த மாதிரியான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.

 

பேசுவது என்பது மிகவும் எளிது. அமைதியில் ஒரு வலிமை இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களிலேயே ரொம்ப அழகான கதாபாத்திரம் இது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்க முடியும் என நம்பிய இரா.சரவணன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.