Skip to main content

"மாமா குட்டி கதாபாத்திரம் தான் எனக்கு புடிச்சிருந்துச்சு.." - ஜி.பி.முத்து

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

gp muthu speech in love today 100 day function

 

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டு தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சி நடந்து கொண்டு வருகிறது. 

 

இந்த நிலையில் இப்படம் வெற்றிகரமாக 100வது நாளைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவை படக்குழு நடத்தியுள்ளது. அதில் படக்குழுவினருடன் பலரும் கலந்த கொண்டு பேசினர். அப்போது நடிகர் ஜி.பி.முத்து பேசுகையில், "படத்தின் ப்ரோமோஷனுக்கு என்னை கூப்பிட்டாங்க. நான் யோசித்தேன். அப்போது லெட்டர் மட்டும் வந்து படித்தால் போதும் என்று சொன்னாங்க. அதை செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. படத்தில் எனக்கு மாமா குட்டி கதாபாத்திரம் தான் எனக்கு புடிச்சிருந்துச்சு. அது அழகாக இருக்கு. லவ் டுடே படம் தான் நான் ரிவியூ பண்ண முதல் படம்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு குறித்து உலா வந்த தகவலுக்கு முற்றுப்புளி வைத்த பிரபலம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
ashwath marimuthu clarifies to simbu fans

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அந்த வீடியோவில், பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்திருந்தனர். 

ashwath marimuthu clarifies to simbu fans

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு முதலில் நடிக்கவிருந்து பின்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இத்தகவலை தற்போது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். “எல்லா சிம்பு ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிம்பு சார் என்னை அழைத்து படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது ஸ்டைலில் பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தின் போதும் முதல் ஆளாக அழைத்து ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். அவருக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் வேறு. அவர் ரெடியாக இருக்கும் போது அப்படம் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வத் மாரிமுத்து அவரது முதல் படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஷோக் செல்வன், ரிதிகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை ரீமேக் செய்தார். இதையடுத்து ப்ரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குகிறார். 

Next Story

10 வருடம் கழித்து நடக்கும் பிரதீப் ரங்கநாதனின் ஆசை

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
pradeep ranganathan next with ashwanth marimuthu

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தை 'ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவகியது. அந்த சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லலித் தயாரிக்க கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

pradeep ranganathan next with ashwanth marimuthu

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஓ மை கடவுளே பட இயக்குநர் அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மே முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.