Skip to main content

சுயலாபத்திற்காகத் தமிழ் உச்ச நடிகர்கள் இந்த பிரச்சனை குறித்து பேசுவதில்லை - அமீர் தாக்கு 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

director ameer said Tamil top heros dont talk about language problem selfish

 

இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதில் இருந்து இந்தி மொழி குறித்த விவாதங்கள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் 'இந்தி தேசிய மொழி இல்லை' என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 'இந்திதான் நமது தேசிய மொழி' என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற நடிகை கங்கண ரனாவத் இந்தி, ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. அதனால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி என பேசினார். இதையடுத்து அஜய் தேவ்கனின் லிஸ்டில் கங்கனாவையும் சேர்த்த இணையவாசிகள் பாரபட்சமின்றி வறுத்தெடுத்தனர். 

 

இவர்களைத் தொடர்ந்து நடிகை சுஹாசினி மணிரத்னம், "இந்தி ஒரு நல்ல மொழி. அதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை கிளியுள்ளது. 

 

சுஹாசினி கருத்துக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், "இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றால், அப்போ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? இதை சுஹாசினி விளக்கவேண்டும். இந்த மண்ணில் ஆரியம் மிக ஆழமாக காலுன்றியிருக்கிறது. அது ரொம்ப ஆபத்தானது. அந்த ஆரியம் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை கொண்டு வந்து கொண்டிருக்கும். இந்தி தெரியாத மக்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும். இந்தியைத் திணிப்பவர்கள் என் தேசத்தை விட்டு வெளியேற வேண்டும். மற்ற மொழி நடிகர்களை போல தமிழில் இருக்கும் உச்ச நடிகர்கள் சுயலாபத்திற்காக மொழி பிரச்சனை குறித்து பேசுவதில்லை. அப்படி பேசினால் தனக்கு இருக்கும் சினிமா வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் தான் அதற்கு காரணம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமீருக்கு ஆதரவாய் களமிறங்கிய சேரன்!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

director Cheran came out in support of  director Ameer 

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், அமீருக்கு ஆதரவாய் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “அமீர்... மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே; திமிராய் இரு, நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்". என்றிருக்கிறார்.

 

அதோடு இயக்குநர் ஞானவேல் ராஜாவிற்கும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில், “ஞானவேல் ராஜா... படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்க வேண்டும்.” என்றிருக்கிறார்.

 

 

Next Story

நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் (படங்கள்)

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று (03.05.2023) உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் இறுதி ஊர்வலத்தில் நிறைய திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மனோபாலாவிற்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.