Skip to main content

மீரா ஜாஸ்மின் தமிழில் ரீ என்ட்ரி - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

After a decade Meera Jasmine make his re entry in tamil and telugu

 

மாதவன் நடிப்பில் வெளியான 'ரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். தொடர்ந்து விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா என முன்னணி நடிகரோடு ஜோடி போட்டார். இதனிடையே ஆயுத எழுத்து, சண்டக்கோழி என ஹிட் படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு படங்களில் நடிப்பதை குறைத்து வந்த மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் மட்டும் சில படங்களில் கவனம் செலுத்தினார். 

 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் 'விமானம்' படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.  

 

மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'விஞ்ஞானி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் 2013ல் வெளியான 'மோக்‌ஷா' படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு மொழிகளில் மீண்டும் நடித்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

actress meera jasmine after long time starring tamil movie

 

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மீரா ஜாஸ்மின் நடிகர் விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சிநேயா, விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு 'விஞ்ஞானி' படத்தில் நடித்திருந்தார். 

 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பல தமிழ் படங்களில் நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தமாகி வருகிறார். விரைவில் இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது ரசிகர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.