Skip to main content

“அந்த சக்தி மூலமாக பலர் மீண்டு வந்திருக்கிறார்கள்”- நடிகர் விவேக் வேண்டுகோள்

Published on 20/08/2020 | Edited on 20/08/2020
vivek

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் விவேக் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,  ”அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவும் உலகத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் ஒரே காரியத்திற்காக வேண்டும் போது அதன் சக்தியே தனி. அந்த சக்தி மூலமாக பலர் மீண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறது. அதனால் நம்ம எஸ்.பி.பி.க்காக நாளை மாலை 6 மணிக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்