Skip to main content

“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
 

sidharth

 

 

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் இரண்டு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றிவிட்டனர். இந்த புதிய மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்.. அதில், “எனது மாநிலத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்.  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததின் மூலம்  எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான நிறத்தையும், அவரது நேர்மையையும், அதிகார பலத்திற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவர் என்பது தெரிகிறது. இவை அனைத்திற்கும் உங்களுடைய அரசு பொறுப்பு, அதுவரையில் தற்காலிக அதிகாரத்தை அனுபவையுங்கள். 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக ஆதரித்திருக்க மாட்டார். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் அதிமுகவின் கொள்கையை எப்படி மாற்றியது” என்று பதிவிட்டார். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த,  அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளம்பரத்திற்காக சில நடிகர்கள் இவ்வாறு கேள்வி கேட்பார்கள் என்று தெரிவித்தார்.

தற்போது இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சித்தார்த், “அவர் நான் யார் என்று கேட்கிறார். கவலையில்லை. அவருடைய அரசு தான் எனக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதளிப்பதாக சொன்னது. இதனை கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை விருது வழங்கவில்லை.

எனக்கு விளம்பரத்துக்காக பேச வேண்டிய தேவையில்லை. நான் எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன். நேர்மையாக எனது சொந்த முயற்சியால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Siddharth joins hands with Vijay Sethupathi's director

 

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அருவம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' , 'சேதுபதி', 'சிந்துபாத்' படங்களை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்தான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

சாய்னா நேவாலுக்கு எதிராக சர்ச்சை கருத்து... சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Actor Siddharth has madecontroversial comment about saina nehwal

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிர டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நடிகர் சித்தார்த்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.  இதனிடையே நடிகர் சித்தார்த் தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.