Skip to main content

மீண்டும் இணைந்த 'மதயானை கூட்டம்' கூட்டணி!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

kathir

 

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா, வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் `மதயானைக் கூட்டம்'. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் உருவாக்கப்பட்டிருந்த விதம், விக்ரம் சுகுமாறனின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன் பிறகு, நீண்ட நாட்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்து வந்த விக்ரம் சுகுமாறன், தற்போது சாந்தனு பாக்யராஜ் நடித்து வரும் ‘இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 

இந்த நிலையில், விக்ரம் சுகுமாறனின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மதயானைக் கூட்ட’த்தில் நாயகனாக நடித்த கதிர், இப்படத்திலும் நாயகனாக நடிக்க உள்ளார். லிப்ரா ப்ரொடக்‌ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார். பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. `மதயானைக் கூட்டம்' பட வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்