Skip to main content

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் - விலகும் முக்கிய வீரர்!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

SHREYAS IYER

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, நேற்று புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தவான், கோலி, கே.எல்.ராகுல், க்ருனால் பாண்டியா ஆகியோரின் சிறப்பான பேட்டிங்காலும், பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்துவீச்சாலும் இந்தியா அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

 

இந்தப் போட்டியின்போது, இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதில், ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்தநிலையில் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் குணமாக சில வாரங்களாகும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான, மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆடமாட்டார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

 

ஷ்ரேயஸ் ஐயர், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும், முதல் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

 


 

Next Story

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி.. புதிய சாதனையுடன் வெற்றி பெற்ற இந்தியா..தொடரையும் கைப்பற்றி அசத்தல்

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

India won the one-day match against South Africa with a new record

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. 

 

இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மாலன் மற்றும் டி காக் தொடக்கம் முதலே நிதானமாக ஆடினர். இருந்தும் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி பந்துவீச்சில் பதம் பார்த்தது. 

 

முதல் விக்கெட்டாக வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களில் டி காக்கை வெளியேற்றி விக்கெட் வேட்டையை ஆரம்பித்து வைத்தார். இதன் பின் வந்த அனைத்து தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் விக்கெட்களை கொடுத்து வெளியேறினர். முடிவில் 27.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக க்ளாசன் 34 ரன்களை எடுத்தார்.

 

சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் சபாஷ் அஹமத், சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் மிக குறைந்த ரன்களை பதிவு செய்தது தென் ஆப்பிரிக்கா.


 
100 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய அணியில் கேப்டன் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 49 ரன்களுக்கு வெளியேற இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஷ் ஐயர் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 19.1 ஓவர்களில் இந்திய அணி 105 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக சிராஜ் தேர்வு தேர்வானார்.

 

 

Next Story

மூன்றாவது ஒரு நாள்.... வெற்றி கோப்பை யாருக்கு?

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

Third one day.. Victory and trophy for whom?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. 

 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி தேர்வு செய்யப்பட்டது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வெல்லும் அணி இரு வெற்றிகளுடன் கோப்பையை கைப்பற்றும்.

 

ஷிகர் தலைமையிலான இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் மட்டுமே இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி சாத்தியமாயிற்று. சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் தனது ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை பொறுத்த வரையில் சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆறுதல் அளிக்கின்றனர். 

 

தென் ஆப்பிரிக்க அணியில் ஒருவர் எதிர்பாராமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். இது அந்த அணிக்கு பெரும் பலம். டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பெரிதும் உதவுகிறது. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளனர். 

 

கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னும் மெனக்கெட்டு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்று இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த கூற்று 10 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே எடுபடும். ஏனெனில் இப்பொழுது ஆடும் பேட்ஸ்மேன்கள் தேவைப்படும் பொழுதெல்லாம் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே அனுப்பும் திறன் பெற்றுள்ளனர். எனவே இரு அணிகளும் பந்து வீச்சில் கவனம் செலுத்தினால் அன்றி எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்த முடியாது.