Skip to main content

அமர்க்களப்பட இருக்கும் ஐபிஎல்; புதிய விதிகள் அறிவிப்பு

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

ipl 2023; new rules added

 

ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு முதல் இம்பாக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறை மற்றும் மேலும் சில விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

 

ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தியா முழுவதும் ஐபிஎல் காய்ச்சல் அடிக்கத் துவங்கியுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகம் சில புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

 

அந்த வகையில், இம்முறை இம்பாக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் படி ஒவ்வொரு அணியும் ப்ளேயிங் 11 மட்டுமல்லாது கூடுதலாக ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே சேர்த்துக்கொள்ள முடியும். அப்படி சேர்க்கப்படும் போது நடுவர் எவ்வாறு சிக்னல் கொடுக்க வேண்டும் என்பதையும் பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. 

 

போன ஆண்டு வரை டாஸ் போடும் முன்பு இரு அணியின் வீரர்கள் விவரமும் தெரிவிக்கப்படும். ஆனால், இனி டாஸ் போடப்பட்ட பின்  ப்ளேயிங் 11 மற்றும் கூடுதலாக 5 மாற்று வீரர்களையும் அறிவிக்கலாம். இதன் மூலம் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியின் போது பேட்டிங் செய்யும் வீரர்களை தேவையில்லாமல் கீப்பரோ அல்லது பீல்டிங் செய்யும் வீரரோ சீண்டினால், அப்பொழுது கடைசியாக வீசப்பட்ட பந்து டெட் பால் எனக்கூறி பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் கொடுக்கப்படும். 

 

அதே போல் பந்துவீசும் அணி ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட நேரம் முடிந்த பின் வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே நிற்கவைக்க வேண்டும். வைடுகள் மற்றும் நோபால் குறித்தும் வீரர்கள் ரிவியூ கேட்கும் வசதியை ஐபிஎல்லில் பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

 


 

Next Story

தோனிக்கு அறுவை சிகிச்சை?

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Dhoni surgery? for knee injury

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி முதல் நாளில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இந்த வெற்றியுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். 

 

தனது இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட தோனி குஜராத் உடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்டது. இது குறித்து அப்போது பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளம்மிங், “தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அசைவுகளில் அதை நீங்கள் கணலாம். அது அவருக்கு சிறு தடையாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். அதில் சந்தேகம் இல்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழி நடத்துவார்” என்றார். இதன் பின்பே சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். சென்னை அணியின் முதல் போட்டியில் தோனி கலந்து கொண்டார். அப்போட்டியில் தோற்றாலும் தோனி விளையாடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

 

காலில் காயத்துடனே அனைத்து லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனாலும் இந்த சீசன் முழுவதும் தோனி ரன்களை எடுப்பதற்கு சிரமப்பட்டதை காண முடிந்தது. தன்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என வீரர்களிடம் சொல்லி இருப்பதாக தோனி ஒரு லீக் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார். லீக் போட்டி ஒன்று முடிந்த பின் தோனி காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதும், சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்த பின் ரசிகர்களுக்கு நன்றி செலுத்த மைதானத்தை சுற்று வந்த போதும் காலில் முழங்கால் கேப் உடனே வலம் வந்தார். இத்தகைய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது. 

 

இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபெண் மருத்துவமனையில் சில சோதனைகளுக்காக தோனி அனுமதிக்கப்பட இருக்கிறார் என்றும் முழங்கால் காயத்திற்கு முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் அவர் வீடு திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டால் முழுமையான சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

Next Story

“மேன் வித் எ ப்ளான்” - தோனிக்கும் சென்னை அணிக்கும் முதல்வர் வாழ்த்து!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

"Man with a Plan" Dhoni and the Chennai team congratulated by the Chief Minister!

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று நேற்றுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். 

 

இந்நிலையில் ஒவ்வொரு சூழலுக்கும் திட்டம் வகுத்து செயல்படும் தோனி தலைமையில் 5 ஆவது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை அணிக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இக்கட்டான சூழலில் தனது முகத்தில் பதற்றத்தை வெளிக்காட்டாத ஜடேஜா சென்னை அணிக்கான வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.