Skip to main content

பெர்த் மைதானத்தில் சொதப்பும் இந்திய அணி

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

 

ind

 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. நான்காம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஷமி 6 விக்கெட்களையும், பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரஹானே 30 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் ரிஷப் பந்த் 9 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது.