Skip to main content

இந்தியா ஏன் தொடர்ந்து சொதப்புகிறது? - நான்கு காரணங்கள்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018

இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்த செய்த வெளியானபோதே, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வலுத்தது. ஒரு கிளாசிக் ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு என்பது மிக அரிதானது. அதிலும் குறிப்பாக லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், டெக்னிக்கல் விளையாட்டை ஊக்குவிக்கும் டெஸ்ட் போட்டிகளின் மீது எதிர்பார்ப்பு குவிவதில் வியப்பேதும் இல்லை.
 

India

 

 

ஆனால், இந்த எதிர்பார்ப்பை இந்திய அணி பாசிட்டிவ்வாக கையாண்டதா? என்று கேட்டால் இல்லை. ஒருநாள் தொடரை இழந்த கையோடு, அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருக்கிறது இந்திய அணி. அணியில் தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் கட்டாய வெற்றி பெறுவது மட்டுமே இந்திய அணியின் மீது திரும்பியிருக்கும் மோசமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு. அதிலும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தோல்வியைச் சந்தித்திருக்காத அணி என்பதால், அந்தக் கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது. 
 

இந்திய அணியின் சொதப்பலுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமான நான்கு காரணங்களை இதோ பட்டியலிட்டிருக்கிறோம். ஒருவேளை வேறு காரணம் இருந்தால், அதை கமெண்டிடலாம்..
 

ஓப்பனிங் சோதனைகள்
 

Virat

 

 

இங்கிலாந்தின் சூழல், காற்று வீசும் வேகம், ஈரப்பத நிலை என எல்லாமும் ஒன்றுசேர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கின்றன. அங்கு எந்த வேளையில் பந்துவீசினாலும் ஸ்விங் ஆகும் என்பதால், புதிய பந்தை எதிர்கொள்ளும் ஓப்பனிங் வீரர்கள் தவறான ஸாட்களைக் கூட பவுண்டரிகளாக மாற்ற முடியும். ஆனால், இந்திய ஓப்பனிங் அதைச் செய்யத் தவறிவிட்டது. குறிப்பாக, ஓப்பனிங் இணையை பலமுறை மாற்றிய பிறகும் அந்த இடைவெளியை நிரப்பவே முடியவில்லை. 
 

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்
 

அணியின் முக்கியமான பொறுப்புக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு, பலரது நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். ஆனால், ஒரு கம்பேக் கதக்களியைக் கொடுக்காமல், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிவிடுவது அவர்மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடுகிறது. அணியில் தொடர்ந்து இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது அவர் சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையென்றால், ரிஷப் பாண்ட் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார்.

 

 

ஆல்ரவுண்டர்(!) பாண்டியா
 

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுகிறார் என்ற காரணத்திற்காக, டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விமர்சனங்களைச் சம்பாதித்தவர் பாண்டியா. எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே பவுண்டரியைப் பறக்கவிட்டாலும், நீண்ட ஃபார்மேட்டில் களத்தில் நீடிப்பதே முக்கியத்துவமானது. பந்துவீச்சிலும் பெரிதும் சோபிக்காமல் விட்டால் ஆல்ரவுண்டர் மீதான நம்பிக்கைக்கு மதிப்பில்லாமல் போய்விடும். அதனால், அந்நிய மண்ணில் அதிரடியாக விளையாட்டை வெளிப்படுத்தும் ஒரு ஆல்ரவுண்டரை இந்திய அணி கூடியவிரைவில் தயார் செய்ய வேண்டும்.
 

விராட் படும் பாடு
 

Virat

 

 

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இருந்த விமர்சனங்களை தலைகீழாக மாற்றியவர் விராட் கோலி. அதனால்தான், இப்போதைய நிலையில், அணியின் மொத்த சுமையும் அவர் பக்கம் திரும்பிவிட்டதோ என்னமோ. முதல் டெஸ்ட் போட்டியில் தனியாளாக விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு, நிலையான இணை கிடைத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம். முக்கியமாக இங்கிலாந்து பயிற்சியாளர் சொன்னதுபோல், விராட்டிற்கு மறைமுகமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதை மாற்ற சகவீரர்கள் விராட்டிற்கு உதவி செய்ய மனமிறங்க வேண்டுமே.
 

Next Story

6 நிமிடங்களில் 50 ரன்கள்! அதிசயிக்க வைத்த ஆர்.சி.பி.வீரர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
50 runs in six minutes! Amazing RCB player will jacks

ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.

50 runs in six minutes! Amazing RCB player will jacks

கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.  

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.