Skip to main content

கடிக்க வந்த மலைப்பாம்பை கடித்து குதறிய ஹனிபேட்ஜர்... வைரலான புகைப்படம்!

Published on 10/12/2019 | Edited on 11/12/2019

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் தன்னை இரையாக்க வந்த மலைப்பாம்பினை தனக்கு இரையாக்கியது ஹனிபேட்ஜர் என்ற விலங்கு. சோபே உயிரியல் பூங்காவில் ஹனிபேட்ஜர் என்ற சிறிய விலங்கு ஒன்றை மலைப்பாம்பு பிடித்தது. சிறிது நேரம் இரண்டும் உயிர் வாழ்வதற்காக ஒன்றுக்கொன்று மல்லுக்கட்டின. இந்நிலையில் மலைப்பாம்பை கடித்து அதன் பிடியில் இருந்து ஹனிபேட்ஜர் விடுவித்துக் கொண்ட நேரத்தில் வந்து சேர்ந்த இரு நரிகள் மலைப்பாம்பினை கடித்தன.
 

g



ஆனால் எதிர்பாராதவிதமாக மலைப்பாம்பின் கழுத்தை கடித்து அதனை கொன்றது ஹனிபேட்ஜர். இறுதியில் பாம்பினை யார் உணவாக கொள்வது என்ற போட்டியில் தன்னை விட பெரிய விலங்கான நரிகளை வென்று தன்னை இரையாக்க வந்த பாம்பினை தனக்கு இரையாக்கிக் கொண்டது.

சார்ந்த செய்திகள்