Skip to main content

மேயர் வேட்பாளர் யார்? களத்தில் குதித்த அமைச்சர் குடும்பம்!! திண்டுக்கல் மல்லுக்கட்டு!!!

Published on 01/12/2019 | Edited on 01/12/2019

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக ஜெ.அறிவித்தார் அப்படி இருந்தும்கூட மாநகராட்சிக்கான வரைமுறையை விரிவுபடுத்த இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே 60 வார்டுகளில் செயல்படக்கூடிய மாநகராட்சி 48 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர்.

 

Who is the mayoral candidate? Minister's Family

 

இந்தநிலையில்தான் உள்ளாட்சியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளை மறைமுகத் தேர்தல் நடத்த எடப்பாடி அரசு முடிவு செய்து இருப்பதால் கவுன்சிலர்கள் மூலம் மேயர் சேர்மன் பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளை தேர்வு செய்ய இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதுலயும் திண்டுக்கல் மாநகராட்சி இந்தமுறை பெண் மேயருக்கு ஒதுக்கியதால் ஆளும் கட்சி எதிர்க் கட்சிகளுக்கு இடையே மேயர் வேட்பாளருக்கான போட்டியும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆளும் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளரும், மத்திய வங்கி கூட்டுறவு தலைவருமான மருதராஜ்தான் கடந்தமுறை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தார். தற்போது இந்த மாநகராட்சியை பெண்களுக்கு ஒதுக்கியதால் தனது மகள் பொன்முத்துவை மேயராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். அதற்காகவே பொன்முத்து களத்தில் இறக்கி எட்டாவது வார்டில் கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறார். அதுபோல் அமைச்சர் சீனிவாசனின் ஐந்து மகன்களும் கட்சி பொறுப்புகளிலும், பதவிகளிலும் பெரிதாக இல்லை அதனால் ஏதாவது ஒரு மகனை மேயராக வேண்டும் என்று சீனிவாசன் நினைத்திருந்தார்.

 

Who is the mayoral candidate? Minister's Family


ஆனால் பெண் மேயருக்கு'னு மாநகராட்சியை ஒதுக்கியதால் மருமகள்களை களத்தில் இறக்கி அதில் ஒரு மருமகளை மேயராக்க அமைச்சர் சீனிவாசன் முடிவு செய்திருக்கிறார். அதற்காகவே அமைச்சர் சீனிவாசனின் மகன்களான ராஜ்மோகனின் மனைவி விமலா, வெங்கடேசன் மனைவி மகாலட்சுமி, டாக்டர் பாலு மனைவி அபி, சதீஷ் மனைவி சிந்து, பிரபு மனைவி காயத்திரி ஆகிய ஐந்து மருமகள்களும் மாநகராட்சியில் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள ஐந்து வார்டுகளில் களத்தில் குதிக்க விருப்பம்மனு கொடுத்திருக்கிறார்கள். இப்படி மாவட்ட செயலாளர் குடும்பம் அமைச்சர் குடும்பத்தினர் மேயர் வேட்பாளருக்கு விருப்பமான கொடுத்திருந்தாலும் கூட மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணனின் மனைவி சந்திரா மற்றும் அபிராமி கூட்டுறவுவங்கி தலைவர் பாரதி முருகனின் மனைவி மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரேம்குமார் மனைவி உட்பட சில மகளிர் அணியினரும் மேயர் வேட்பாளராக வார்டில் குதிக்க விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஆளுங்கட்சியில் கடும் போட்டி நடந்து வருகிறது.

 

Who is the mayoral candidate? Minister's Family


திமுகவை பொறுத்தவரை மாவட்டத்தில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தும்கூட கடந்தமுறை மேயர் பதவியை நழுவவிட்டாச்சு. அதனால்  இந்தமுறை 48 வார்டுகளில் 35 வார்டுகளையாவது கைப்பற்றி மேயர் சீட்டில் உட்கார வேண்டும் என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி நேரடியாகவே வார்டில் கவனம் செலுத்தி வெற்றி பெறக்கூடிய உ.பி.க்களையும், மகளிர் அணியினரையும் களத்தில் இறக்க தயாராகி வருகிறார்.

 

Who is the mayoral candidate? Minister's Family


அதோடு பெண்களுக்கு மேயர் பதவியை ஒதுக்கியதால் பெண் மேயர் வேட்பாளராக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளரும், ஐ.பி.யின் தீவிர ஆதரவாளருமான ஜெகனின் மனைவி சித்திரா 31வது வார்டில் களமிறங்க விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதுபோல் முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி மனைவி சாந்தி 9 வது வார்டில் போட்டிபோட மனு கொடுத்திருக்கிறார். அதோடு முன்னாள் கவுன்சிலர்களான அருள்வாணி, சகாயமேரி இப்படி சிலர் மகளிர் அணியினரும் விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஐ.பி.யின். தீவிர ஆதரவாளரான ஜெகனின் மனைவி சித்திரா தான் மேயர் வேட்பாளர் என உ.பி.க்கள் மத்தியிலே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

Who is the mayoral candidate? Minister's Family

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தற்போதுதான் மாநகர செயலாளர் ராமுத்தேவர் கட்சிப் பொறுப்பாளர்களிடமும், மகளிர் அணியினரிடமும் கவுன்சிலர்களுக்கு போட்டி போடுபவர்களுக்கான விருப்பமனு வாங்கி வருகிறார். இதில் மேயர் வேட்பாளர் என்பது வெற்றி பெற்ற பின்புதான் முடிவு செய்யப்படும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிபோல் முன்கூட்டியே மேயர் வேட்பாளர் யார் என அறிவிக்கமாட்டோம் மாநகராட்சி கவுன்சிலர்கள்களுக்கு போட்டி போடும் 24 பெண்களுமே மேயர் வேட்பாளர்தான் என மாநகர செயலாளர் ராமுத்தேவர் ஒருபுறம், மகளிரணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார். இப்படி அதிமுக., திமுக., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் மாநகராட்சி தேர்தலில் போட்டி போட ஆர்வம் காட்டி வருகிறார்களே தவிர கூட்டணி கட்சிகள் மத்தியில் எந்த ஒரு ஆர்வத்தையும் பார்க்க முடியவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனி பெயர் மட்டும்தான் தங்கம், தங்கப்பன் என வைக்க முடியுமே தவிர வாங்க முடியாது' -திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Now only the name is gold, you can only name as Thangapan but you cannot buy gold' - Dindigul Srinivasan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி சிந்தலவாடம்பட்டி ஊராட்சி, ராமபட்டினம், புதூரில் அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான முஹம்மது முபாரக்கை ஆதரித்து  திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்  சீனிவாசன் பேசுகையில், 'ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கழகம் என்ன ஆகுமோ என்ற நிலை இருந்தது. ஆனால் ஏகோபித்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அன்பினால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற துரோகிகளை வென்று கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார் ஜெயலலிதா இருந்தபோது கூட சட்டசபையில் 67 சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் பெற முடிந்தது. எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 75 சட்டமன்ற உறுப்பினர்களை கழகம் பெற்றது. திமுக தேர்தலுக்கு முன்பாக 520 வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பாலும் தேனும் ஆறாக ஓடும் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதே போன்றுதான் தற்போதும் திமுகவின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சாத்தியம் இல்லாத நிறைவேற்ற முடியாத திட்டங்களை வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், தாய் சேய் பெட்டகம்,அம்மா கிளினிக்குகள், மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதோடு அரிசி, பால், பருப்பு விலை கடுமையாக உயர்ந்து விட்டது. சொத்து வரியை உயர்த்தி விட்டது. மின் கட்டணம் பன்மடங்காக உயர்த்தி விட்டது. மாநில அரசுதான் இந்த கொடுமை என்றால் மத்திய அரசு அதைக் காட்டிலும் கொடுமையாக உள்ளது. இனி சாமானியமான மக்களால் தங்கம் வாங்க முடியாது. தங்களது பிள்ளைகளுக்கு தங்கப்பன் தங்கம்மாள், தங்கம் என பெயர்தான் வைக்க முடியும். எனவே, இந்த மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கு அச்சாரமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அமோக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

Next Story

நெல்லை முபாரக்கின் பேச்சு - கண் கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Nellie Mubarak's Speech-Dindigul Srinivasan sad

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முகமது முபாரக், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரான திலகபாமா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்  நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்கள். அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் வீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என இரண்டு அமைச்சர்களும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் முபாரக் பேசுகையில், 'இரட்டை இலை சின்னம் எனது அருகில் உள்ளது. ஒன்று திண்டுக்கல் சீனிவாசன் மற்றொருவர் நத்தம் விஸ்வநாதன். எனது அப்பா 2015ல் இறந்துவிட்டார். எனது தாய் 2022 இறந்துவிட்டார். இப்படி தந்தை தாய் இல்லாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பதிலாக தந்தையும் தாயுமாக எனக்கு இரண்டு அப்பாக்கள் உள்ளனர். அதில் ஒருவர் சீனிவாசனும் மற்றொருவர் விஸ்வநாதனும் உள்ளனர். அதேபோல் அதிமுகவில் உள்ள தொண்டர்களும் என்னை அரவணைக்க உள்ளனர்' எனப் பேசினார். இவ்வாறு வேட்பாளர் பேசும்போது, தன்னையே அறியாமல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.