Skip to main content

“அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் செயல்படுத்தாத திட்டங்களுக்கு புத்தகம் வெளியிட்டிருக்கிறோம்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

"We have published a book on projects not implemented under Rule 110  the  ADMK regime" - Minister Chakrabarty

 

தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ரேசன் கடைகளில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வருகிறார். அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரங்கண்டநல்லூர் நெல் அரவை நிலையத்தையும், காணைக்குப்பம் ஊராட்சியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தையும், பெரும்பாக்கம் நியாய விலைக்கடையையும் அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர்கல்வித்தறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


அதன்பின் பத்திரிகையாளர்களிடம் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையின்போது 505 தேர்தல் அறிக்கைகளை அறிவித்தார். அதை எதிர்க்கட்சிக்காரர்கள், ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்று சொன்னார்கள். ஆனால் 110 விதியின் கீழ் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளன. 


அவர்கள் ஆட்சியில் பல ஆயிரம் கோடிக்கு 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தவில்லை. அதை புத்தமாக வெளியிட்டிருக்கிறோம். கூட்டுறவுத் துறையின் கீழ் ரேசன் கடையையும் ஒரே துறையாக கொண்டு வரப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ உளுந்தம்பருப்பும் கூடுதலாக தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதல்வர் தெரிவித்து இருந்தார். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே என்ன என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். இன்னும் நான்கு வருடங்கள் மக்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அடுத்தும் நாங்கள் தான் தொடர்ந்து இருப்போம். அதனால் தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபோல ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ உளுந்தம்பருப்பும் கூடிய விரைவில் மக்களுக்கு கொடுப்பார்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது