Skip to main content

''தப்பா ஊசி போட்டு இப்படி அநியாயமா கொன்னுட்டானுங்களே..." - கதறித் துடித்த பெற்றோர்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

unjustly by injecting them..." - the crying parents

 

சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தங்களின் 15 வயது மகள் இறந்து விட்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான நந்தினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சல் இருந்ததால் மண்ணடியில் உள்ள சென்னை நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அல்சர் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால் வயிற்றுப் புண்ணை சரி செய்ய தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. பிறகு வயிற்று வலியும் குறைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று மதியம் மருத்துவர்கள் ஒரு ஊசியைச் செலுத்தியுள்ளனர்.அந்த ஊசி செலுத்திய பிறகு நந்தினியின் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அந்த ஊசி செலுத்தப்பட்ட பிறகு தங்கள் மகளின் உடலில் பல்வேறு விதமான பின் விளைவுகள் உடனடியாகத் தெரிந்ததாகவும். அது ஏதோ தவறான ஊசி. அந்த ஊசியை எங்களின் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் எங்களுக்குத் தெரிவிக்காமலே செலுத்திவிட்டனர். அந்த ஊசி செலுத்திய பிறகு எங்களுடைய மகள் வலியால் துடித்தால் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சிறுமியின் தந்தை ரமேஷ் கூறுகையில், ''இன்று காலை எங்களை அழைத்து நந்தினி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டோம். எங்களுடைய மகளின் சாவில் மர்மம் உள்ளது. அது என்ன ஊசி? எதற்காக எங்கள் அனுமதியில்லாமல் செலுத்தினீர்கள். அந்த ஊசியை செலுத்திய பிறகு எங்கள் மகள் வலியால் துடித்தால் எங்களுடைய மகளின் சாவுக்கு இந்த மருத்துவமனையும் மருத்துவர்களுமே முழுப் பொறுப்பு” என்று கூறி மருத்துவமனையில் கதறி அழுது துடித்தார். 15 வயது மகளைப் பறிகொடுத்து விட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தது பார்ப்போரை நெஞ்சைப் பதறச் செய்யும் சோகமாக இருந்தது.

 

உறவினர் பையனைக் கட்டி அழுத மாணவியின் தாயார் "உனக்குதானே என் பொண்ண கல்யாணம் செஞ்சி கொடுக்க நினைச்சேன்... இப்படி அநியாயமா கொன்னுட்டானுங்களே..." என்று கூறிக் கதறி அழுதது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பெற்றோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களையும் சமாதானம் செய்தனர். இறுதியில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டி இருப்பதால் மாணவியின் உடல் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை நேஷனல் மருத்துவமனையின் மருத்துவர்களிடம் நாம் விளக்கம் கேட்டபோது, “நாங்கள் சரியான சிகிச்சை தான் கொடுத்தோம். எந்த விதமான தவறான சிகிச்சையும் வழங்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தனர். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.