Skip to main content

'யுடியூப்' வீடியோ பார்த்து மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன்... ஆபத்தான நிலையில் மாணவி...!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை என்ற திரைப்படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வயிற்றைக் கொடூரமாகக் கிழித்து குழந்தையை எடுப்பார் அப்படத்தின் வில்லன் ஆன ஆர்.கே.சுரேஷ். இந்தக் காட்சியைப் படத்தில் வைத்ததற்காக இயக்குனர் பாலாவையும், நடிகர் ஆர்.கே.சுரேஷையும் பலர் விமர்சித்தனர். இந்த சினிமா பட காட்சியை நிஜகாதலிக்கு அரகேற்றியுள்ளான் ஒரு கொடூர காதலன்.

 

tiruvallur incident-lover admit hospital

 



திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதே ஆன அரசுக் கல்லூரி மாணவி சித்ரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சவுந்தர் என்பவரும் சித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையிலும் சந்தித்து காதலித்து வந்தவர்கள் எல்லையை மீறியதால், சித்ரா கர்ப்பமாகி உள்ளார். இந்த விஷயம் நாளடைவில் தெரிய வர, வெளியே யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க பல முயற்சிகளை இருவரும் எடுத்துள்ளனர்.

இது பலன் அளிக்காத நிலையில்,  அந்த பெண் 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் காதலன் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள காப்புக்காடு ஒன்றுக்கு மார்ச் மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை அழைத்துச் சென்று யுடியூப் வீடியோ பார்த்து ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். 

இதில் அந்த இளம் பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தற்போது அந்த இளம் பெண் ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் செய்து எடுக்கப்பட்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபரீத காதல் கர்ப்பத்தை மூடிமறைக்க இளம் பெண்ணிற்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்த சவுந்தரை, கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சாதாரண நபர் அறுவை சிகிச்சை செய்வது என்பது சாத்தியமான விஷயம் அல்ல. மேலும் ஆபரேஷன் செய்து வயிற்றுப் பகுதியைக் கிழித்து எடுக்க எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் செய்ய முடியாது. அதே போல மயக்க மருந்து செலுத்தாமலும் இப்படிச் செய்ய முடியாது என்பதால் மருத்துவம் தெரிந்த யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசரணை நடத்தி வருகின்றனர். 


   

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.