Skip to main content

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா; மாணவரின் ஆடைகளைக் கழற்றி சோதனை - போராட்டம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

தஞ்சையில் பட்டம் பெற வந்த மாணவரை பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேற்றி ஆடைகளைக் கழற்றி சோதனை செய்த போலீசாரை கண்டித்து முற்றுகை.

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24 ஆம் தேதி ஆளுநர் ரவி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா நடந்தபோது, ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் செய்தனர். இந்த நிலையில் எம்ஃபில் பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி என்ற மாணவரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து கருப்புக் கொடி வைத்துள்ளாரா என சோதனை செய்துள்ளனர். இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் விழா முடிந்து செல்லும் வரை பாதுகாப்பாக வைத்திருந்த போலீசார், அவர் சென்ற பிறகு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன், மாணவர் அரவிந்தசாமிக்கு பட்டம் வழங்கினார்.

 

இந்த தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட நிலையில் அரவிந்தசாமியின் ஆடையைக் கழற்றி சோதனை செய்த போலீசாரை கண்டித்து  26 ஆம் தேதி தஞ்சை டிஐஜி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் என அறிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து டிஐஜி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அறிவித்தபடியே அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ, டைஃபி இளைஞர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னால் செல்ல முயன்றபோது போலீசார் அரண் அமைத்தனர். அரணை தள்ளிவிட்டு தடுப்பு கம்பிகளை தள்ளிக்கொண்டு முன்னேறியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.