Skip to main content

எட்டாம் வகுப்பு மாணவி கடத்தல்; கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

school student incident college student pocso act police

 

சேலம் மாவட்டம், தளவாய்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). கல்லூரி மாணவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் பூஜா (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆசை காட்டி வந்துள்ளார். 

 

வாலிபரின் ஆசை வார்த்தையை நம்பிய சிறுமியை சமீபத்தில் அவர் கடத்தியிருக்கிறார். பெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுமி இருக்கும் இடம்  தெரியவில்லை. மோகன்ராஜூடன் சிறுமி சென்றது குறித்து சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், மோகன்ராஜ் மீது சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு மோகன்ராஜிடமிருந்து சிறுமியையும் மீட்டனர். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், கடத்திச் சென்ற குற்றத்திற்காகவும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; இருவர் கைது

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Prohibited lottery sales; Two arrested

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னிமலை, ரோடு, கே.கே. நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள துணி சலவை செய்யும் கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் காசி பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (38), பூவரசன் (27) என்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 10, 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்; அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
young woman misbehaves with a college student

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 20 வயதான மாணவி ஒருவர் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த 26 வயதான இளம்பெண்ணுடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளனர். 

அப்போது, மாணவிக்கு இளம்பெண் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து, பின்னர் அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரடமைந்த அந்தப் பெண் மாணவி குளிக்கும் போது அவரை ஆபாசமாகப் படம் பிடித்து ஓரினச்சேர்க்கைக்கு மீண்டும் அழைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் எல்லையை மீறிப்போக, அதிர்ச்சியில் மாணவி வீட்டை காலி செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் மாணவியிடம் வீட்டை காலி செய்தால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தால் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில்  விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவி கூறியதில் உண்மை இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் இளம்பெண் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏன் நான் அப்படிச் செய்தேன் என்று புரியவில்லை என்று கூறி என்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். இதனையேற்றுகொண்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் அயனாவரம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.