Skip to main content

பாதாளச் சாக்கடைப் பணியில் சாத்தூர் நகராட்சி அலட்சியம்!- மண் சரிந்து தொழிலாளர்கள் இருவர் பலி!

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

Chatur Municipality Negligence in Underground Sewer Work!- Two Workers Killed in Landslide!

உயிரின் மதிப்பை உணராத சாத்தூர் நகராட்சி நிர்வாகத்தால், அநியாயமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. 

 

சாத்தூரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான குழாய்களைப் பதிக்கும் வேலையில், 30- க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (16/07/2022) சனிக்கிழமை இரவில், சாத்தூர் நகர் முக்குராந்தலில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டும் பணியை, சின்னசேலம் – குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்தனர். பகல் நேரத்தில் வேலை செய்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு மக்களுக்கு இடையூறு உண்டாகும் என்பதாலேயே, இரவு நேரத்தில் வேலை பார்த்தனர். 

Chatur Municipality Negligence in Underground Sewer Work!- Two Workers Killed in Landslide!

குழிதோண்டியபோது மண் சரிந்து விழுந்து, தோண்டிய குழிக்குள் சக்திவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தொழிலாளர்களும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனே, சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜேசிபி மூலம் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, புதைந்த இருவரையும் தீயணைப்புத்துறையினர் சடலங்களாக மீட்டனர். 

 

முதலில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட இருவரது உடல்களும்,  அங்கிருந்து விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. பாதாளச் சாக்கடைக்கான பணிகள் நடைபெற்ற போது,  உயிர்காக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், இருவர் உயிரிழந்திருக்க மாட்டார்களே? எனக் கேள்வியும் எழுந்துள்ளது. 

 

இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.