Skip to main content

கஞ்சா வியாபாரியிடம் மாமூல் வசூல்: டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை.

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகம், சேலம் குரங்குசாவடியில் இயங்கி வருகிறது. இதன் டிஎஸ்பி (காவல்துறை துணை கண்காணிப்பாளர்) ஆக நாமக்கல்லைச் சேர்ந்த குமார் பணியாற்றி வருகிறார்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராணி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியது, அவரை கைது செய்யாமல் இருக்க மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்தது ஆகிய புகார்களின்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் டிஎஸ்பி குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2017 முதல் 2019 காலக்கட்டத்தில் நடந்துள்ளது.

 

Bribery

 


டிஎஸ்பி குமார், தனக்கு கஞ்சா வியாபாரிகள் கொடுக்கும் லஞ்சப் பணத்தை, தஞ்சாவூரில் வசிக்கும் அவருடைய மைத்துனர் சிபிச்சக்கரவர்த்தி என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லி, மாமூல் வசூலித்து வந்துள்ளார். ராணி மட்டுமின்றி பல கஞ்சா வியாபாரிகளிடம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் மாமூல் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு உடந்தையாக, அப்போது சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாராக பணியாற்றி வந்த சாந்தாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதும், சிபிச்சக்கரவர்த்தி மீதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


டிஎஸ்பி குமார், கோவை மாவட்டம் கணபதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயியிருப்பில் வசித்து வருகிறார். சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இன்று (ஜூலை 24) டிஎஸ்பி குமார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். 


இந்த சோதனையில் பல்வேறு சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், நில பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர். பல்வேறு இடங்களில் டிஎஸ்பி குமார் சொத்துகளை வாங்கி போட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் எங்கெங்கு யார் யார் பெயர்களில் சொத்துகள் உள்ளன? என்பதை லஞ்ச -ஒழிப்புத்துறையினர் வெளியிட மறுத்துவிட்டனர். அவருடைய வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.