Published on 19/07/2018 | Edited on 19/07/2018

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் 2 நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை காலை கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை மாறுநாள் அதிகாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மோகன் பகவத் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குமரி மாவட்டத்தில் பலப்படுத்தப்பட்டு உள்ளன.