Skip to main content

‘ஏய் போடா போ... அப்படித்தான் பண்ணுவேன்’ - பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ரயில்வே ஊழியர்

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Railway employee behaved rudely to Tamil Nadu passengers

 

“ஏய் போடா போ போ.. அப்படிதான் பண்ணுவேன்” என தமிழக பயணிகளிடம் ஒருமையில் பேசிய ரயில்வே ஊழியரின் வீடியோ தற்போது மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழக பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதே சமயம், நாகர்கோவில் ரயில் நிலையத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

 

மேலும், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குமிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இருப்பதால் பயணிகள் மொழி பிரச்சனையில் சிக்கி விவரங்கள் தெரியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் சில ரயில்வே ஊழியர்கள், வேண்டுமென்றே பயணிகளிடம் வம்பிழுத்து வருகின்றனர். டிக்கெட் வழங்குமிடத்தில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள், தமிழக பயணிகள் கேட்கும் விவரங்களுக்கு சரியாக பதில் கூற முடியாமல் சில நேரங்களில் அநாகரிகமாக பேசுவதால் தமிழ்நாடு ரயில் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணி ஒருவர், கவுண்டரில் இருந்த ஊழியர்களிடம் விவரம் கேட்கும்போது, அவர் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, விரக்தியடைந்த வடமாநிலத்தவர் அந்தப் பயணியை மாற்று மொழியில் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அங்கிருந்த பயணிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததால், கவுண்டரில் இருந்த ஊழியர் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இது தொடர்பாக அந்த பணியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.