Skip to main content

ஆட்சி மாறும் நகைகடன் தள்ளுபடியாகும்னு சொல்லி அட்டைய வாங்கினாங்க.. வங்கியில் மாலை முதல் விசாரணை

Published on 06/05/2019 | Edited on 07/05/2019

 


   புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13.75 கிலோ வாடிக்கையாளர்களிடம் அடகு வாங்கிய தங்க நகைகளை காணவில்லை என்று வங்கி முதுநிலை மேலாளர் மாரீஸ்கண்ணன் புகார் கொடுத்திருந்தார்.   அதாவது,  அதே வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்த திருக்கட்டளை மாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனார். 5 நாட்களுக்கு பிறகு மாரிமுத்துவின் சடலம் கோடியக்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய பிறகு 6 வது நாள் புகார் கொடுத்துள்ளார். 

 

b

 

அந்த புகாரில் இறந்த மாரிமுத்து நகைகளை எடுத்திருக்கலாம் என்பது போல ஒருவர் மேல் மட்டுமே சந்தேகத்தை கிளப்பியுள்ளது மக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.  அலுவலக உதவியாளரிடம் எப்படி சாவிகள் போனது. அப்படியானால் மாரிமுத்து சாவிலும் மர்மம் உள்ளது. வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்து நகைகளை திருடிவிட்டு மாரிமுத்துவை மட்டும் மாட்டிவிடும் முயற்சியாக அவரை கொலை செய்தார்களா அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா என்பது முதலில் தெளிவாக வேண்டும் என்கின்றனர்.


இந்த நிலையில் பல வாடிக்கையாளர்களும் தங்கள் நகைகளை திருப்ப வந்த போது,  மத்தியில் ஆட்சிமாற்றம் வரும்.  அப்ப நகை கடன் தள்ளுபடியாகும்.  அதனால இப்ப திருப்ப வேண்டாம் என்று பல வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் சொன்னதுடன் பலரது நகை அடகு வைத்த அட்டைகளையும் வாங்கி வைத்துக் கொண்டதாக பல வாடிக்கையாளர்களும் புகார் கூறுகின்றனர்.

 

b

   

இந்த நிலையில் தான்  இன்று மதியம் இறந்த வங்கி ஊழியர் மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிளை போலிசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து டி எஸ் பி ஆறுமுகம், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மாலை 6 மணிக்கு பிறகு  வங்கியில் வங்கி அதிகாரிகளிடம் விசாரனை தொடங்கியுள்ளனர். இரவு 8 மணியை கடந்தும் விசாரனை தொடர்ந்தது. நாளையும் விசாரனை தொடரலாம் என்கின்றனர் காவல் துறை வட்டாரத்தில்.


  

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கியில் ரூ. 3,600 கோடி கடன் வாங்கியதில் மோசடி செய்த பிரபல நிறுவனம்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

pnb complaints dhfl to rbi

 

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனம் ரூ. 3,688.58 கோடி கடன் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் சார்பில், ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

 

DHFL நிறுவனத்திற்கு நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் பேங்க் மும்பையில் உள்ள கார்ப்பரேட் கிளை மூலம் கடன் கொடுத்துள்ளது. இதில் அந்நிறுவனத்தின் செயல்படாத சொத்து கணக்கின் மூலம் மோசடி நடந்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ஒரு லட்சம் கோடி அளவிலான கடன்களை பல்வேறு வங்கிகளில் பெற்றுள்ள DHFL நிறுவனம்,  அந்த வங்கிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

மோசடியின் அளவையும் கண்டறியும் வகையில், அதிகாரிகள் அந்நிறுவனத்தின் ஆவணங்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளும், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸின் கணக்குகளில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது மிகப்பெரிய மோசடி இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் நகை வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.11,300 கோடி மோசடியில் பஞ்சாப் நேஷனல் பேங்க் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

3 முறை தோல்வி 4- வது முறை 5 கோடி, 5- வது முறை 13 கோடி... வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கடந்த 2- ஆம் தேதி அதிகாலை நகைக்கொள்ளையில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்ததில் முருகன் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய கூட்டாளிகளை தொடர்ச்சியான கைதுக்கு, பிறகு அவன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.

 

இந்த நிலையில் பெங்களூரில் இருந்த முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து நகைகளை மீட்டு, பெரம்பலூரில் வைத்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வருடம் ஆரம்பத்தில் ஜனவரி மாதம் உப்பியபுரத்தில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி, அதை அடுத்து கடந்த 18- ஆம் தேதி மண்ணச்சநல்லூர் மத்திய கூட்டுறவு வங்கி கொள்ளையடிக்க முயற்சி, கடந்த 21- ஆம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள பஞ்சாப் வங்கியில்  கடன் வழங்கும் நிதியை கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருந்தாதாலும், லாக்கர்களை உடைக்க முடியாததாலும் வங்கிகளை கொள்ளையடிக்க முடியவில்லை. இதையெல்லாம் பாடமாக வைத்து தான், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கரெக்டாக அடித்து விட்டோம்.

trichy lalithaa jewellery thief murugan team welding ganesh

 

எல்லா வங்கி கொள்ளை முயற்சியும் தொடர் விடுறை இருப்பதை கணக்கில் வைத்து தான்.. கொள்ளையடிக்க திட்டமிட்டோம். முதல் 3 வங்கியில் முயற்சி தோல்வி அடைந்தது. 4- வது இந்த வங்கியில் மாடியில் துளையிட்டுதான் உள்ளே இறங்கி கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி கொள்ளையடித்தோம். மொத்தம் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே லாக்கரில் மட்டும் 100 பவுன் நகைகள் இருந்தது. எங்களுக்கு வெல்டிங் பண்ண ராதாகிருஷணன், நான், சுரேஷ், மற்றும் கணேஷன் ஆகியோர் பண்ணினோம் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

trichy lalithaa jewellery thief murugan team welding ganesh

 

இந்த நிலையில் திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது..  லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனை திண்டுக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்துள்ளோம் என்றார்.