Skip to main content

புதுக்கோட்டை காவல்துறை அலட்சியம்.. மண்ணோடு மண்ணாகும் சாலை தடுப்புகள்..

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
police

 

  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு கயிறுகளையும் தடுப்பு கட்டைகளையும் பயன்படுத்திவந்த போலிசார் தற்போது இரும்பு சாலை தடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரும்பு தடுப்புகள் வாங்க அரசாங்கமும் நிதி ஒதுக்குகிறது பிரபலமான நிறுவனங்களும் நிதி கொடுக்கிறது. திடீரென மக்கள் போராட்டம் என்றாலும் இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்துவிடும் வல்லமை போலிசாரிடம் உள்ளது.


 அதே போல தான் திருவிழா, முதலமைச்சர் வருகை, எதிர்கட்சி கூட்டங்கள் என்று எங்கே மக்கள் கூடினால் இரும்பு தடுப்புகளே முன்னால் வரும்.


    
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஒரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மக்கள் போராட்டம் மறு பக்கம் ஜல்லிக்கட்டு இது தினசரி நிகழ்வாக உள்ளது. மக்கள் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஜல்லிக்கட்டை ரசித்துக் கொண்டிருப்பார்கள் 3 மாதங்களாக புதுக்கோட்டை மாவட்ட நிலைமை இதுதான் என்றாலும் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும்.

 


   இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ரசிகர்களின்  பாதுகாப்புக்காக தடுப்புக் கட்டைகள் அமைத்தாலும் இரும்பு தடுப்புகளையும் லாரிகளில் ஏற்றிச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள் மாவட்ட போலிசார்.

 

 ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த தடுப்புகளை மறுபடியும் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல ஏனோ காவல் துறைக்கு மனம்வரவில்லை. அதனால் 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் கூட இரும்பு தடுப்புகள் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது.


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆலங்குளக்கரையில் பிப்ரவரி 25 ந் தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர், ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவரும் கலந்து கொண்டார்கள். அந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்கு கொண்டு சென்ற இரும்பு தடுப்புகள் ஆங்காங்கே கிடந்து உடைந்து துருப்பிடித்து ம்ணோடு மண்ணாகிறது. இதே நிலை தான் மாவட்டம் முழுவதும்.
  

 சில காவலர்களே.. இரும்பு தடுப்புகள் செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்குது. பல பிரபலமான தனியார் நிறுவனங்களும  நிதி கொடுக்கிறதால அதை பாதுகாக்கும் எண்ணம் குறைந்துவிட்டது. தேவைக்கு ஏற்ப புதுசாவே வாங்குவோம். அந்த டெண்டரை ஒரு மாண்புமிகு தான் எடுத்து செய்றார் என்றனர். 


மக்கள் வரிப்பணம் மண்ணோடு மண்ணாகலாமா? மாவட்ட காவல் நிர்வாகம கவணிக்குமா?
  

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.