Skip to main content

''வயதில் இளையவரான கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்ட பேராசிரியர்; கேட்டு நெகிழ்ந்து போனேன்''-திருமா பேச்சு

Published on 18/12/2022 | Edited on 18/12/2022

 

"Professor who accepted the youngest kalaingar as a leader; I was humbled" - thiruma speech

 

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அரசியல் களத்தில் அவரைப்போல முதிர்ச்சியும், பக்குவமும் கொண்ட ஒரு தலைவரை நாம் பார்க்க முடியாது. வயதால் மூப்படைவது என்பது மட்டும் முதிர்ச்சி அல்ல. பண்பால் முதிர்ச்சி அடைவதுதான் சிறப்புக்குரியது. அவர் பக்குவம் நிறைந்தவர், நிதானம் நிறைந்தவர், பதற்றப்படாதவர் என்பதை நாடறியும். அவர் மேடையில் சொன்னார் 'என்னை விட ஒரு வயது. ஒன்றரை வயது இளையவர் கலைஞர்.

 

அவரை தலைவரை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைவிட வயதில் மூத்தவனாக இருக்கக்கூடிய நான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் கலைஞரை விட்டால் தமிழினத்தை காப்பாற்றுவதற்கு நாதியில்லை என்பதால் தான். கலைஞரைப் போல உழைக்க யாராலும் முடியாது. அவருடைய உழைப்பும், அவருடைய அர்ப்பணிப்பும் இந்த மொழிக்கும், இனத்திற்கும் ஒரு வரலாற்று தேவையாக இருக்கிறது. எனவே தான் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்ட நான் என்னைவிட ஒரு வயது இளையவராக இருக்கக்கூடிய கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன். கட்சி மாறப் போகிறேன் என்றெல்லாம் வதந்திகள் பரப்புகிறார்கள். எந்த காலத்திலும் இந்த அன்பழகனிடம் ஒருபோதும் எடுபடாது. அது நடக்காது' என்று உறுதிப்பட பேசினார்.

 

அவருடைய பேச்சு தெள்ளத்தெளிவாக இருந்தது. 'நான் முதலில் மனிதன்;இரண்டாவதாக அன்பழகன்; மூன்றாவதாக சுயமரியாதைக்காரன்; நான்காவதாக அண்ணாவின் தம்பி;ஐந்தாவதாக கலைஞரின் தோழன்;இதுதான் நான்' என்று தன்னை பற்றி விளக்கிருக்கிறார். நான் மனிதன் என்று சொல்வதிலிருந்து அவர் எந்த அளவுக்கு பெரியாரியத்தை உள்வாங்கி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எல்லோரும் தங்களது சாதி அடையாளத்தையும், மத அடையாளத்தையும் முன்னிறுத்துகிற இந்த சமூக அமைப்பில் 'நான் மனிதன்' என்று சொல்லக்கூடிய ஒரு சுயமரியாதைக்காரராக அவர் வளர்ந்திருக்கிறார்.

 

ஒருமுறை நானும் எனது கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் பேராசிரியர் இல்லத்திற்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன போது, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் நெகிழ்ந்து போனேன். அரசியல் உலகில் இப்படி ஒரு நட்பு, தலைமையின் மீது மதிப்பு இதுவரை நாம் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை என்று சொல்லத் தக்க வகையில் கலைஞர்-பேராசிரியர் நட்பு இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அன்றைக்கு அவர் கலைஞரைப் பற்றி அவ்வளவு பேசினார். ஓடி உழைக்க முடியாத சூழ்நிலையிலும் இனம், மொழி என்ற கவலையோடு அவற்றை காப்பாற்றுவதற்கு தகுதி படைத்தவர் கலைஞர்தான் என்று எங்களிடம் பேசினார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.