Skip to main content

விஷம் கொடுத்தும் புருஷன் சாகல... காதலனிடம் ஃபோனில் சொன்ன மனைவி... விசாரணையில் அதிர்ந்த போலீசார்... 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

Police

 

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கார் டிரைவர், தரணிதரன். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கணவர் தரணிதரன் கடந்த 22ஆம் தேதி கடன் தொல்லைக் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பவானி பூந்தமல்லி போலீசார் புகார் செய்தார். 

 

இந்தப் புகாரையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தரணிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தரணிதரன், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

 

இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் பவானி மீது சந்தேகம் அடைந்த போலீசார், பவானியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பவானி முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினார். பவானியின் செல்போன் அழைப்புகளைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் மட்டும் அடிக்கடி பேசி இருப்பதும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் பவானி வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

 

பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது, தரணிதரனின் நண்பரான தினேசும் டிரைவராக உள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்கள். நாளடைவில் தரணிதரன் வீட்டிற்கு தினேஷ் வந்து செல்லும் அளவுக்கு நட்பு நீடித்தது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால், பவானி மீது கண் வைத்துள்ளார் தினேஷ். இதனால் தரணிதரன் வீட்டுக்கு தினேஷ் அடிக்கடி வந்து செல்வார். அப்போது தினேசுக்கும், பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் முறை தவறிய உறவாக மலர்ந்துள்ளது.  

 

தங்களது சந்திப்புகளுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதாக பவானியும், தினேஷும், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி தரணிதரனுக்கு சாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார், பவானி. வழக்கம்போல உணவு அருந்திவிட்டு தூங்கிய தரணிதரன், மறுநாள் காலையில் எழுந்து வாந்தி எடுத்துவிட்டு, காஃபி குடித்துவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார். 

 

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் தரணிதரன் சாகவில்லை என்றதும் ஆத்திரம் அடைந்த பவானி, காதலன் தினேசை போனில் தொடர்புகொண்டு, விஷம் கொடுத்தும் புருஷன் சாகல, எப்போதும் போலத்தான் இருக்கிறார். உடனே நீங்கள் வாருங்கள் என அழைத்துள்ளார். காதலன் வருவதற்குள் குழந்தைகளை தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்த பவானி, காதலன் வந்ததும், காதலனுடன் சேர்ந்து கணவரைத் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

 

படுத்துக்கிடந்த தரணிதரனின் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தார். தரணிதரன் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டதுபோல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றிவிட்டு தினேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

பின்னர் கொலையை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்குத் தானே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டது போல் பவானி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. 

 

கைதான இருவரும் போலீசார் முன்னிலையில் தரணிதரனை கொலை செய்தது எப்படி? என நடித்துக் காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.