Skip to main content

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தேர்வு எழுதிய மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவர்களில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

 

exam result

 

மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 

மாவட்டங்களில் திருப்பூர் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. 95.23% பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் 95.15% பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 94.97% பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. 
 

12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 2,697 மாற்றுத் திறனாளிகளில் 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


 

 

 

 

 

சார்ந்த செய்திகள்