Skip to main content

மெட்ரோவில் தனிமனித இடைவெளியுடன் பயணம் செய்த மக்கள்!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020


சென்னையில் இன்று காலைமுதல் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்தது.  
 
ஊரடங்கு தளர்வுகளில் வரும் 7 -ஆம் தேதிமுதல் மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை இன்று மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படியே நிலையத்திற்குள் செல்வதற்குமுன் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மக்கள் பயணம் செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்