Skip to main content

தவறை ஒப்புக்கொண்ட விவசாயிகள்... வனத்துறையினருக்குத் தகவல் அளித்த மக்கள்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

People who informed the forest department

 

கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் உள்ளது மல்லாபுரம். இந்தப் பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இங்கு மயில்கள், காட்டுக்கோழிகள், மான்கள், காட்டுப் பன்றிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தானியங்களை சாப்பிடுவதற்காக காட்டுப்பகுதியை விட்டு ஓரம் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களைத் தேடி காட்டைவிட்டு வெளியே வருவது வழக்கம். அப்படி வரும் வன விலங்குகள் விவசாயிகளின் பம்புசெட்டு மோட்டார்களில் இருந்து பாய்ச்சப்படும் தண்ணீரை குடிப்பது வழக்கம்.

 

தங்களது விளை நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்வதாக கருதும் விவசாயிகள் குருணை மருந்து கலந்து தங்களது வயல் வெளி ஓரம் தூவி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மல்லாபுரம் காப்புக்காடு பகுதி அருகில் உள்ள மக்காச்சோள வயல் அருகில் நேற்று முன்தினம் 11 மயில்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இறந்து கிடந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையில் வனவர்கள் முருகன், ராம்குமார், சதீஷ்குமார் ஆகிய வனத்துறையினர் மயில்கள் இறந்து கிடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி கால்நடை மருத்துவரை வரவழைத்து அவர்களை பிரே பரிசோதனை செய்தனர்.

 

வயல் வெளி பகுதியில் கிடந்த குருணை மருந்தை தின்ற காரணத்தினால் மயில்கள் இறந்து போனதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் தர்மலிங்கம், சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் தங்களது வயல் வரப்புகளில் குருணை மருந்து தூவி  வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக மேலும் அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.