Skip to main content

ஓலா கார் ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் உயிரிழப்பு... செங்கல்பட்டு அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

கடந்த வாரம், ஓலா கால் டாக்ஸி டிரைவர் வாடிக்கையாளராக வந்த சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்னை அருகே ஓலா கார் டாக்ஸி ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது கன்னிவாக்கம் கிராமம். கன்னிவாக்கம் கிராமம் குந்தன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் உமேந்தர். கோவையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த உமேந்தர், வார இறுதியில் சொந்த ஊரான கன்னிவாக்கத்திற்கு வருவது வழக்கம். எப்பொழுதும்போல் கடந்த வெள்ளிக்கிழமை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார் உமேந்தர். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக மனைவி பவ்யா, குழந்தைகள், சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஏழு பேருடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். பின்னர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மனைவி பவ்யாவின் சகோதரி தேவிபிரியாவின் செல்போனிலிருந்து உமேந்தர் ஓலா கால் டாக்ஸி புக் செய்துள்ளார்.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த இன்னோவா காரில் அனைவரும் ஏறிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓலா கார் ஓட்டுநர் ரவி  பயணத்தை தொடங்குவதற்கான ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்பொழுது உபேந்தர் தனது செல்போனை சோதித்துப் பார்த்துவிட்டு ஓ.டி.பி வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குங்கள் என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு உபேந்தர் இறங்க முடியாது என தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அதன் பிறகு காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை 'சடார்...' என்று வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி 'ஏன் கார் கதவை வேகமாக சாத்தினாய்' என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார். உமேந்தரும் பதிலுக்கு கையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் ரவியை அடித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் சரமாரியாக உமேந்தரை ரவி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார் உபேந்தர். அங்கிருந்த பொதுமக்கள் உபேந்தரை மீட்டர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர்  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற ஆலோ ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுனர் ரவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே ஓலா டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளர்களாக வந்த திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐடி ஊழியர் ஒருவர் ஓலா கார் ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.