Skip to main content

கேட்டக் கேள்விக்கு பதில் கூறாமல் சென்ற செல்லூர் ராஜு 

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த  மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் ராஜன் செல்லப்பா மகனுமான ராஜ் சத்யனும் , அவரோடு இருந்த அமைச்சர் செல்லூர் ராஜும் மதுரை தொகுதிக்கு என்ன செய்வீங்க ...என்னிடம் கேளுங்க  எனக்கூறி ஒரு வாட்ஸஅப் நம்பரை அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டனர். அப்போது நிருபர்கள் நிறைய கேள்விகளை எழுப்பினர் . அதில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மதுரை மக்களவை தொகுதியில் கடந்த முறை அதிமுகவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் அதோடுமட்டுமில்லாமல் அதிகமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த தொகுதியில் உள்ளனர் இருந்தும் எந்த ஒரு தொகுதி பிரச்சனைகளும் , மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளும் தீர்க்கப்படமால் இருக்கிறது என்று நிறையக்  கேள்விகளை அடுத்தடுத்து கேட்க ஆரம்பித்தனர் . ஒரு கட்டத்தில் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சிறிது நேரத்திலேயே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்து கொண்டு புறப்பட ஆரம்பித்தனர் .

 

sellur raju



உடனே அங்க இருந்த பத்திரிக்கையாளர்கள் ஏன் கேள்விகளுக்கு பதில் கூறாமல் செல்கிறீர்கள் என்று கேட்க சிரித்துக்கொண்டே அமைச்சரும் , பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் அங்க இருந்து கிளம்பினார்கள். அணைத்து கேள்விகளுக்கும் அதிரடியாகவும் , நகைச்சுவையாகவும் பதில் சொல்லக் கூடிய செல்லூர் ராஜு அவர்களும் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஒரு சில நிமிடங்களில் முடித்துக் கொண்டு சென்றது சற்று ஏமாற்றமாக இருந்ததாக அங்க இருந்தவர்கள் பேசிக் கொண்டே வெளிய சென்றனர் .
 

சார்ந்த செய்திகள்