Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி தொடங்கியது!

Published on 10/04/2023 | Edited on 11/04/2023

 

neet coaching class started for government school students

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் (10.04.2023) திங்கட்கிழமை அன்று கும்பகோணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நா.ரவிச்சந்திரன் அவர்களால் நீட் இலவச பயிற்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. பயிற்சியில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான கருத்தாளர்கள் பள்ளிக் கல்வித்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு தேர்வுகளையும் நடத்தி நீட் தேர்வை சிறப்பாக எதிர் கொண்டு நல்ல மதிப்பெண் பெறுவதற்கு தயார் செய்வதற்கான ஆயத்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அல்லி மற்றும் இதர ஆசிரிய பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

 

இப்பயிற்சி இன்று முதல் மே 6 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் தவிர ஏனைய நாட்களிலும் நடைபெறும். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது, ‘அரசுப் பள்ளியில் படிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் ஏழை நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களால் பணம் அதிகமாக செலுத்தி நீட் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாது என்ற எண்ணத்தில் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக் கல்வித்துறை மூலமாக ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்வதற்கு பாட ஆசிரியர்களை நியமித்துள்ளது. அவர்கள் மூலம் மாணவர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் சரி செய்து தேர்வில் வெற்றி அடைவதற்கு முழுமையான வழிகாட்டுதல் செய்யப்பட இருக்கிறது. இப்பயிற்சியானது கடந்த இரண்டு ஆண்டுகளாக செம்மையாக நடைபெற்று வருகிறது.

 

இந்த ஆண்டு அதாவது இன்றிலிருந்து தொடங்குகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயிற்சியை சரியாக எடுத்துக் கொண்டால் நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்ணை பெற முடியும். அரசினுடைய உள் ஒதுக்கீட்டில் (7.5 %) விழுக்காடு இடத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக பெற முடியும். அது மட்டுமல்லாது தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு முழுமையாக கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஏதுமின்றி அவர்கள் படித்து மருத்துவராக முடியும். நன்றாக படித்து ஒரு நல்ல மருத்துவராக செயலாற்ற முடியும். எனவே இந்த நீட் தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் இப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். சிறப்பாக பயிற்சி பெற்று கூடுதல் மதிப்பெண்களை பெற வேண்டும் என கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் நா.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார். நாளை முதல் முறையாக இந்த பயிற்சி மையம் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.