Skip to main content

நளினி மனு தள்ளுபடி

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய முடிவெடுத்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தன்னை சட்டத்திற்கு புறம்பாக  சிறையில் அடைத்து வைத்துள்ளதாக ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரில் ஒருவரான நளினி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

 

 Nalini petition dismissed

 

இந்த மனுவை தற்பொழுது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையில் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் முடிவெடுக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என தமிழக அரசு கூறியிருந்த நிலையில் தற்பொழுது நளினியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்