Skip to main content

பெண்களிடம் மோசடி... காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

NAGARKOVIL INCIDENT


கன்னியாகுமரி, நாகர்கோவிலில் சமூகவலைதளத்தில் பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக, நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் காசியை கைது செய்தனர். விசாரணையில் காசியின் செல்போனில் பல பெண்களுடன் காசி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில், காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் இருந்தால் புகாரளிக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, ஆபாசமாக படம் எடுத்து ஏமாற்றிய காசியை கைது செய்த போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட காசி மீது பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அதிகாரப்பூர்வமாக 2 பெண்கள் புகாரளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறை பரிந்துரையை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநரே காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்