Skip to main content

"பருவமழையை எதிர்கொள்ள சீரிய நடவடிக்கை" -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

minister r.b.udhayakumar press meet at chennai

 

 

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "பருவமழையை எதிர்கொள்ள சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். 1,069 ஏரிகள் இதுவரை 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 4,133 இடங்கள் இதுவரை அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்