Skip to main content

உயிரைப் பறித்த லேகியம்...

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த இவருக்கு வயது 28. தனது நூறு கிலோ உடல் எடையை குறைக்க சாலையோர கடையில் லேகியம் வாங்கிசாப்பிட்டதாக சொல்லப்படுகிறது .

 

rajiv gandhi hospital


 

அந்த லேகியத்தை சாப்பிட்டவுடன் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து  போலி லேகியம் விற்பனை செய்தவர் தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்