Skip to main content

“கேரள அரசைப் போல், தமிழக அரசும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்”- கே பாலகிருஷ்ணன்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

K Balakrishnan talk about Union Govt Smart Meter

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர். கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஸ்மார்ட் மின் மீட்டர் வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் வைத்தால் தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் மற்றும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் கிடைக்காத வகையில் பெரிய தாக்குதலை ஒன்றிய அரசு செய்துள்ளது.

 

மின்சார மீட்டரை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் தவணை முறையில் மக்களிடம் வசூலித்துக் கொள்வார்கள். இதனால் மின்சார வாரியம் என்பதை ஒழித்துவிட்டு தனியார் கையில் ஒப்படைக்க ஒன்றிய அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசு ஸ்மார்ட் மீட்டர் வைக்கவில்லை என்றால், உதய் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க முடியாது என மாநில அரசை கட்டாயப்படுத்துகிறது. இதற்கு கேரளா அரசு மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டாலும் ஸ்மார்ட் மீட்டரை வைக்க முடியாது என்று கூறியதுபோல தமிழக அரசும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

 

இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 25ஆம் தேதி முதல் 15 நாட்கள் மின்சார வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டரை வைக்க கூடாது என தமிழக முழுவதும் மனு கொடுக்கும் நிகழ்வை நடத்த உள்ளோம்.  மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம். ஆனால் மாநில அரசு மின் கட்டணத்தை ஏற்றுவதாக பாஜகவினர் பேசிவருகிறார்கள். குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் இரட்டிப்பு வேலையை பாஜக செய்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் கூறி வருகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் செய்ய முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரியாக பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இணைத்து கணக்கெடுப்பு டுக்க வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கணக்கெடுப்பு நடத்தியது, ஆனால் ஜாதி அடிப்படையில் என கணக்கெடுப்பை வெளியிடவில்லை. 2021 இல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதியவாரிய கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் கொரோனாவை காரணம் காட்டி அவர்கள் நடத்தவில்லை.

 

பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா நேரத்திலும் நடத்தப்பட்டுள்ளது. இது உண்மையான காரணம் இல்லை. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் பொருளாதாரம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியிடங்களில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்து விடும். இதனால் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதியவாரிய கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறார்கள். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

பல லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. நூறாண்டுகளுக்குப் பிறகு ரயில்வே நிர்வாகத்தை விரிவுபடுத்தும் போது இது போன்ற நிலங்கள் வாங்க முடியுமா? எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு நாடு முழுவதும் ரூ 12700 கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ2400 கோடி உள்ளது. தற்போது தீபாவளி நேரம் ஒவ்வொரு வீடுகளிலும் ரூ 8000 வரை பாக்கி உள்ளது. 100 நாள் கூலி தொழிலாளர்களுக்கு பாக்கி வைக்கிற அரசாங்கம் என்ன அரசாங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு உடனடியாக 100 நாள் கூலியை ஒன்றிய அரசு விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

தமிழகத்தில் அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. தீவிரமாக இந்த நேரத்தில் ரெய்டு நடத்துவதற்கான காரணம், தேவை என்ன இருக்கு என்பதை கேட்க வேண்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற எந்த நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தற்போது தமிழகத்தில் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் முதலாளிகள் உள்ளிட்டவர்களின் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்துவது, தமிழகத்தில் பாஜக தேர்தல் நிதியை திரட்ட செய்வதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

 

தமிழக முதல்வர் கடந்த 2 ஆம்தேதி  தேதி விடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய அளவிற்கு ஈடுபட்ட தென்னாட்டு ஜான்சி ராணி என அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று கடலூரில் அவரது முழு உருவ சிலையை திறந்து வைத்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

 

நடராஜர் கோவிலில் தொடர்ந்து பல்வேறு மக்களுக்கும் பக்தர்களுக்கும் விரோதமான செயல்கள், விதிமீறல்கள்  நடைபெற்று வருவதால், இதனை அரசு தனிச் சட்டம் இயற்றி அரசின் முழு கட்டுப்பாட்டுக்கு எடுக்க வேண்டும்.  இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளது என கூறுகிறார்கள். அரசு சட்டம் இயற்றி எடுத்தால் எந்த நீதிமன்றமும் தடுக்க முடியாது.  இதே போல் தான் காசி விஸ்வநாதர் ஆலயமும்,  பிஜேபி ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்திலும் 12 கோவில்களை தனி சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளது. நடராஜர் கோவில் என்பது வரலாற்று பொக்கிஷம். இதனை மற்ற தலைமுறையினருக்கும் அடையாளப்படுத்த வேண்டும். இது தேசத்திற்கு சொந்தமானது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு சொந்தமானது என அடையாளப்படுத்தக் கூடாது.

 

அண்ணாமலை பல்கலைக்கழகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது இல்லையென்றால் நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டு மோசமான நிலையை சந்தித்து இருக்கும். இது தமிழகத்திலேயே 2-வது பல்கலைக்கழகம் 100-ஆண்டு விழாவை நோக்கி செல்லும் இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

முன்னதாக விடுதலை போராட்ட வீராங்கனை தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை அஞ்சலையம்மாள் குடும்பத்தினர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்ஜி ரமேஷ்பாபு, நகரச்செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.