Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் நடிகை ஜெயச்சித்ரா அஞ்சலி - படங்கள்

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
Jayachithra

 

 

 

 

 

தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கலைஞரின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டு, தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. நினைவிடம் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக அஞ்சலி செலுத்தனிர். இன்று 4வது நாளாக இன்றும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று திரைப்பட நடிகை ஜெயச்சித்ரா கலைஞரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். 

 

 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயச்சித்ரா, கலைஞர் ஒரு களஞ்சியம். அரசியலில் மட்டுமல்ல அத்தனை துறைகளிலும் திறமையானவர். அவர் ஒரு நடமாடும் கலைக்கூடம். மாபெரும் கலா ரசிகர். அவரும் ஒரு கலைஞர், கவிஞர், எழுத்தாளர் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் நானும் இருக்கிறேன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அஞ்சுகம் பிச்சர்ஸ் தயாரித்த பூக்காரி, வண்டிக்காரன் மகன் படங்களில் கதாநாயகியாக நடித்தேன். அந்தப் படங்களும் வெற்றி பெற்றது. அதில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. சூரியன் எப்படி உலகம் இருக்கும் வரை இருக்கோ, அதுபோல இந்த உலகம் இருக்கும் வரை அவரின் பெயர், புகழ் என்றென்றும் இருக்கும்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகை ஜெயசித்ரா!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

bfhfdhfdhd

 

கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்துவரும் நிலையில், தயாரிப்பாளர், இயக்குநர், மூத்த நடிகை ஜெயசித்ரா அவர்கள் 1000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற வீட்டிற்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கி உதவினார். இதைத் தொடர்ந்து அவர் பேசும்போது... "கலை உறவுகள் கவலைப்படாமல் தைரியமாக, சந்தோஷமாக இருங்கள். விரைவில் நல்லது நடக்கும். எல்லோருக்கும் ஒரு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும். அனைத்துப் பிரச்சினைகளும் நடிகர் சங்கம் மூலம் தீர்க்கப்படும். நடிகர் சங்கம் உங்கள் தாய் வீடு" என கூறினார்.

 

 

Next Story

''ஒருவேளை அது நடக்காமல் போனால், நீங்கள்தான் பிறக்க வேண்டும்!'' - இசையமைப்பாளர் அம்ரீஷ் 

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

mmg

 

திரையுலகினர் பலரும் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வந்த நிலையில் இசையமைப்பாளர் அம்ரீஷ் தனது அன்னைக்கு வாழ்த்துகள் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
 

"கரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். கரோனாவில் இருந்து கண்டிப்பாக அனைவரும் கூடிய விரைவில் வெளியே வந்துவிடுவோம் என்று நானும் நம்புகிறேன். நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள். அதேசமயம், இன்று அன்னையர் தினம். ஆகையால், என் அம்மாவிற்கு வாழ்த்துகள் கூறுவதற்கு விரும்புகிறேன். என் அம்மா நடிகை ஜெயசித்ரா அவர்களைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டுமென்றால், 'அவர் இல்லையென்றால் நான் இல்லை'. அவரால் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். மிக்க நன்றி அம்மா! என்னை ஆளாக்க மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள். அதற்காக நான் சாகும்வரை கடமைப்பட்டுள்ளேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் உங்களுக்கே மகனாகப் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒருவேளை அது நடக்காமல் போனால், நீங்கள் எனக்கு மகளாகவோ, மகனாகவோ பிறக்க வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.