Skip to main content

“பா.ஜ.க.வுக்கு இந்தியா கூட்டணியால் நிச்சயம் மரண அடி கிடைக்கும்” - நக்கீரன் ஆசிரியர் 

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
India alliance will surely kill BJP says Nakkheeran Editor

சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்​ வன்னி அரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா நேற்று (27.2.2024) மாலை 5 மணிக்கு​ நடைபெற்றது. இதில் நக்கீரன் ஆசிரியர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நூலினை வெளியிட, அதனை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.​

மேலும் இந்நூலுக்கு வாழ்த்துரையாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா,​ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.​ ​

இதில் நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், “தமிழகத்தில் இன்றைக்கு மோடி வந்துள்ள நாளான அதே நாளில் வன்னியரசின் ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியிடுவது சரியான நாளாக அமைந்துள்ளது. விசிகவுடன் எப்போதும் நான் நிற்பதற்கு காரணம், பல நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதும் எனக்கு முதலாக கைகொடுக்க நிற்பவர் திமுக முன்னாள் தலைவர் கலைஞர். அந்த வரிசையில் எப்போதும் எங்கள் திருமா மற்றும்  வன்னியரசு இருப்பார்கள். ஆகையால் இருவருடன் பயணிப்பதில்  எனக்கு பெருமையாக உள்ளது. 

மனிதர்களை சேர்த்து வைத்துள்ளதில் வன்னிக்கு நிகர் யாருமில்லை, ‘அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு’ வள்ளுவன் கூற்றுப்படி நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள் தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.  இது மோடிக்கே பொருந்தும். அடுத்த வரும் ஆட்சியும் நாங்களே என மார்தட்டிக்கொள்ளும் பிஜேபிக்கு இந்தியா கூட்டணியால் நிச்சயம் மரண அடி கிடைக்கும். இந்த நாடு எந்த சூழ்நிலையில் உள்ளது என்றால் 68 ஆயிரம் கிலோ ஹெராயின் காணாமல் போயுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு 5 லட்சம் கோடி. இதனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. 1 கிராம் ஹெராயினுக்கு தேசியப் புலனாய்வு முகைமை அமைத்து தேடும் இவர்கள், 68 ஆயிரம் கிலோ ஹெராயின் காணாமல் போனதை வழக்காகக் கூட பதிவு செய்யவில்லை. மோடி ஆட்சியின் லட்சணம் இப்படித்தான் உள்ளது. வருகின்ற தேர்தலுக்கு வன்னி எழுதிய இந்த புத்தகம் பக்கபலமாக இருக்கும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.