Skip to main content

முதல் நாளிலேயே வெற்றிகளை வாரிக்குவித்த இந்தியா!

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

 India accumulated victories on the first day!

 

மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் இந்திய ஓபன் பிரிவு ஏ, பி, சி என மூன்று அணிகளும் பெண்கள் பிரிவில் ஏ, பி, சி என மூன்று அணிகளும் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கின. 

 

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் எதிர் அணியைச் சேர்ந்த நான்கு வீரர்களை எதிர்கொண்ட நிலையில் முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி உள்ளனர்.  இந்திய 'ஏ' அணியினர் ஜிம்பாபே அணியுடனும், 'பி' அணியினர் ஐக்கிய அரபு அமீரக அணியுடனும், 'சி 'அணியினர் தெற்கு சூடான் அணியினருடனும் விளையாடினர். மூன்று அணியினரும் தங்களின் எதிர் அணியினரை முழுமையாக வீழ்த்தி வெற்றி கண்டனர். இதில் இந்திய அணியில் களமிறங்கிய தமிழக வீரர்கள் குகேஷ், அதிபன், கார்த்திகேயன், நாராயணன் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்