Skip to main content

10 தொகுதிகளில் தேர்தலைப் புறக்கணிப்போம்... அதிமுகவுக்கு எதிராகத் தீர்மானம்!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

If the plan is not abandoned, we will boycott the elections in 10 assembly constituencies .. Three district farmers resolution ..!


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்குச் செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில் இந்த அரசை வரும் தேர்தலில் ஆதரிக்கப் போவதில்லை என்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதியில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி பிரதான பாசன வாய்க்கால் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும் 1 லட்ச ஏக்கருக்கும் மேல் மறைமுக பாசனமும் பெற்று வருகிறது. இந்த மூன்று மாவட்டப் பொதுமக்களின் குடிநீர் ஆதாராமாகவும் இது திகழ்கிறது. 


இந்த நிலையில், தமிழக அரசு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.178 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலில் செல்லும் கசிவு நீர் மூலம், பாசனம் பெறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள், நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், பாலைவனமாகும் சூழ்நிலை உள்ளது. தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

 

If the plan is not abandoned, we will boycott the elections in 10 assembly constituencies .. Three district farmers resolution ..!

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளைத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில், ஆலோசனைக் கூட்டம் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாகவேதம்பாளையம், கடுக்காம்பாளையம், அய்யம்புதூர், பழையூர், கோரக்காட்டூர், வெள்ளாங்கோயில், கொரவம்பாளையம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் மாவட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

 

இக்கூட்டத்தில், கீழ்பவானி பாசன வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் தளத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில், வரும் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராகச் செயல்படுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவதுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.